என் வாழ்வின்
அத்தனைக் கஷ்டங்களும்
அத்தனைத் துயரங்களும்
அத்தனைக் கோபங்களும்
அத்தனை வலிகளும்
அத்தனை சலிப்புகளும்
உன் ஆறுதலான ஒற்றை வார்த்தையில் அடங்கிப் போய்விடுகிறதே!
அது உன் மனதில் இருந்து வராமல்
வெறும் வாய் வார்த்தையாக வந்தாலும் கூட
அதுவே என் ஒவ்வொரு நாளின் எனர்ஜிப் பக்கமாய் மாறும்
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்...