Monday 14 March, 2011

எதை கேட்கணும்?


"பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி..தெரியுமா? அதனால அவங்க என்ன சொன்னாலும் கேட்கணும்..சரியா?"


"ஓ.. அப்படியா? சரி, கேட்டுக்கறேன்..அதனால தான் சகுனி பேச்சை துரியோதனனும், கூனி பேச்சை கைகேயியும் கேட்டாங்களோ..."


"ம்ம்க்கும்..அவுகளுக்குன்னு ஒரு சுயபுத்தி இருந்திருக்கணும்.."




இப்ப நான் பெருமாளை கேட்கறதா? இல்லை சுயபுத்தியை கேட்கிறதா? 


#என்னடா கொடுமை இது? என்னோட மூளைக்கு வந்த சோதனை!