கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில் 'ஹெர்பல் கிளினிக்' நடத்தி வருபவர் டாக்டர் முகுந்தன். இவர் மூலிகை மருத்துவம் பற்றி அறிந்தவர். பூமியில் உள்ள எண்ணில் அடங்காத மூலிகைகளின் பயன்களைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் டாக்டர் முகுந்தன், தீய வழிகளுக்கு மூலிகைகள் பயன்படுத்தப்படுவதை ஆய்வு செய்து வருகிறார்.
அதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் ஏற்படுத்த... தன் ஆய்வில் அறிந்த விஷயங்களை ஒரு தமிழ் நாளிதழில் பகிர்ந்து கொண்டார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.
அவர் கூறிய விளக்கங்கள் இதோ உங்களுக்காக;
"மந்திரம் பண்றேன், செய்வினை வைக்கிறேன், தகடு வைக்கிறேன்னு சொல்லி மாந்திரீகம் பண்ணக் கூடியவன் பல மந்திரங்களை ஓதி, பூஜை போட்டுட்டு கடைசியா, ஒரு பொட்டலத்துல ஏதோ பொடியையோ, தீர்த்தத்தையோ நிச்சயம் தருவான். அது வேறொண்ணுமில்ல...சாட்சாத் மூலிகை தயாரிப்புதான்! அதாவது, தாவரங்கள்ல மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் இருக்கிற மாதிரி, விஷத்தன்மை வாய்ந்த மூலிகைகளும் நிறைய இருக்கு.
வசிய மருந்து வைக்கிறவங்க அதைத் தேடிப்பிடிச்சு பொடி, தீர்த்தம்னு ரெடி பண்ணி, அதை தெரிந்தவர்கள் மூலமா உணவுல கலந்து கொடுப்பாங்க. மூலிகையோட நச்சுத்தன்மை ரத்தத்தில் கலந்து, தன்னோட ஆட்டத்தை துவக்கும். எதிர்மறை தாவரங்களோட காம்பினேஷனை தெரிந்து வைத்திருப்பதுதான் இவர்களது பலம. குறிப்பிட்ட இலை, வேர், முள்ளுனு தேடிப்பிடிச்சி பொடி பண்ணி வெச்சுக்கிட்டு, அதைப் பயன்படுத்தி புகையைக் கிளப்பி 'பிளேபாய்' சாமியார்கள் பெண்களை நினைவிழக்க செய்து விடுவார்கள்.
இப்படி மருந்துக் கொடுக்கப்பட்டவங்க இயல்புக்கு விநோதமா நடந்துக்கறதைத்தான் 'வசியம் வச்சுட்டாங்க' அப்ப்டின்னு சொல்றாங்க. இதெல்லாமே முழுக்க, முழுக்க உடல் சார்ந்த பாதிப்புகளே தவிர அமானுஷ்யமோ, தெய்வத் தன்மையோ துளியும் கிடையாது. கிட்டத்தட்ட ஃபுட் பாய்சன் போலத்தான்.
பெரும்பாலான ம்ருந்துகள் ஜீரணமாகி ரத்தத்துல கலந்த பின்னாலதான் அதோட வேலையைக் காட்டும். இதோட பாதிப்புகள் நீண்ட நாட்கள் நீடிக்கும். இப்படியான தொல்லைககு ஆளாகி உடல்நலமோ அல்லது மனநலமோ பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த சிகிச்சையும், கவுன்சிலிங்க்கும் தேவை."
(நன்றி!: விகடன்)
இது போன்ற தொல்லைகளில் சிக்கி மீள முடியாமல் இருப்பவர்கள் முக்கியமாகப் பெண்கள். பெண்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு கஷ்டம் என்று வரும்போது, வீட்டில் உள்ளவர்களே அப்பெண்ணை மாந்திரீகம் செய்பவர்களிடம் கூட்டிக்கொண்டு செல்வது ரொம்பவும் கொடுமை. படித்தவர்களும் இந்தப் படுகுழியில் விழுவது எப்படி என்றுதான் தெரியவில்லை.
இதைப் படித்த பிறகும் விழித்துக்கொள்ளாவிட்டால் வினை நமக்குத்தான்!
Tuesday, 11 January 2011
Friday, 7 January 2011
ஒரு பெண்ணின் பரிதாபக் கதை
அவள் பெயர் ராதா. அழகான அம்மாவுக்கும், செல்லமான அப்பாவுக்கும் பிறந்த மகள். 4 வயதுக் குழந்தையாக இருந்த போது ஒருநாள் அவள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் அவளுடைய அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சண்டை. வாக்குவாதம் முற்றி, அவளுடைய அம்மா கணவனைப் பயமுறுத்துவதற்காகத் தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். விஷயம் விபரீதமாக முடிந்து அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்தனர். இரண்டொரு நாளிலேயே அந்தம்மாவின் கதை முடிந்து விட்டது. ஒன்றும் அறியாத அந்தப் பிஞ்சுக் குழந்தை 'அம்மா, அம்மா' என்று அழுது அழுது ஓய்ந்து போனது.
ராதா கொஞ்சக் காலம் அவளுடைய அப்பாவுடனும், பாட்டி வீட்டிலும் வளர்ந்து வந்தாள். பாட்டி வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்த அவளுடைய சித்தி, மாமா, அத்தை போன்ற உறவினர்கள் சின்ன சின்ன எரிச்சலையும், அவ்வப்போது கோபத்தையும் அவள் மேல் காட்டிக் கொண்டிருந்தனர். சில வருடங்களுக்குப் பிறகு அவள் அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அதுவரை அம்மா, அம்மா என்று ஏங்கித்தவித்த ராதா புது அம்மா வரப்போவதை ஆசையாக எதிர்பார்த்தாள்.
புது அம்மா வந்து தன்னை ஆசை, ஆசையாகப் பார்த்துக் கொள்வாள் என்று எதிர்பார்த்திருந்த ராதாவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. புது அம்மாவின் உத்தரவுப்படி வீட்டில் உள்ள அத்தனை வேலைகளையும் ராதாவே செய்தாள். வீட்டில் ஒரு மூலையில் இடம் கிடைத்த அந்தப் பெண்ணுக்கு, அந்தம்மாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தவுடன், வீட்டுத் திண்ணை அவளுக்குப் படுக்கை அறையாக மாறியது.
அதுவரை மாற்றாந்தாயின் கொடுமைகளைக் கேள்விக் கேட்கத் திராணியில்லாத ராதாவின் அப்பா அவள் மேல் மேலும் எரிச்சல் பட்டு அவளுடையப் பாட்டி வீட்டுக்குத் துரத்தி விட்டார். பாட்டி வீட்டுக்குப் போனால் அந்த வீட்டிலிருந்த அம்மாவின் உறவினர்கள் அவளைப் பாடாய்படுத்தினார்கள். ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே இரு வீட்டு உறவினர்களும் அவளைக் காசில்லாத வேலைக்காரியாக வைத்திருந்தார்கள்.
இப்படியே எந்தப் பள்ளிக்கூடத்திற்கும் போகாமல் வீட்டு வேலை செய்து, மாற்றாந்தாய்க்குப் பிறந்த தன் தம்பிகளைக் கவனித்துக் கொண்டு அவளது வாழ்க்கை ஓடியது. அப்பாவின் கூடப்பிறந்த அக்கா, தங்கைகள் போன்ற உறவினர்கள் யாராவது அவளைப் பார்க்க வந்தால், "என்னை உங்கள் வீட்டு மருமகளாக்கிக் கொள்கிறீர்களா? நான் நல்லா வேலை செய்வேன் அத்தை. உங்கள் மேல் ரொம்ப அன்பா இருப்பேன். உங்களை நல்லாப் பார்த்துப்பேன்" என்றெல்லாம் கேட்டாள்.
எல்லோருக்கும் அவள் மேல் பரிதாபப்பட்டுக் காசு கொடுத்து விட்டு வரத் தெரிந்ததே தவிர அவளை மருமகளாகிக் கொள்ளும் துணிவில்லை. அவளை அந்த இடத்திலிருந்து தங்கள் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரவும் தைரியமில்லை. அனைவருக்கும் வேறு வேறு வாழ்க்கை அதில் இவளை வேறு கூடவே வைத்துக்கொண்டு பிரச்சினையாக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
உண்மையில் ராதா ரொம்பவும் அழகு. யார் வந்தாலும் அன்பாகப் பேசக்கூடியவள். அவள் உடம்பில் மாற்றாந்தாயான சித்தி கொடுத்த தீக்காயங்கள் ஏராளம்.
அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த ராதாவுக்கு அவள் பாட்டி வீட்டில் இருந்த தன் முறை மாமன் ஒருதலையாகக் காதலித்தான். ராதா அவன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் மௌனமாகவே இருந்தாள். அவளுக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும். தன் மேல் அன்புக் காட்டக் கிடைத்திருக்கும் முதல் ஜீவன் என்று மனதிற்குள் மகிழ்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் "உன்னை என்னால் மறக்க முடியாது, உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்" என்று உறுதியாக அவளிடம் கூறினான்.
திருமண விஷயத்தில் தன் மனதில் பட்டதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தாள். அதற்குள் அந்த முறைப்பையன் தனக்கும், அவளுக்கும் கல்யாண ஏற்பாடுகளை செய்யுமாறு வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டான். எவ்வளவோ வேண்டாம் என்றும் சொல்லியும் அவன் கேட்கவே இல்லை. கல்யாண விஷயத்தில் தன் அப்பாவின் தயவை எதிர்பார்த்ததில் அவரும் கைவிரித்து விட்டார்.
கல்யாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போதே ராதா ரொம்பவும் பயந்து போனாள். இந்தத் திருமணம் நடந்தால் இதே வீட்டு சூழ்நிலையும், கொடுமைகளும் தன்னை வாழ்நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற எண்ணங்கள் மனதில் பாரமாக அழுத்த, இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவெடுத்து விஷம் சாப்பிட்டுத் தன் கதையை முடித்துக் கொண்டாள் அந்தப் பரிதாபப் பெண். அவள் இறந்த ஒரு வாரத்திலேயே ராதாவைக் காதலித்த முறைப்பையனும் சயனைடு சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
இரண்டு உயிர்களையும் பலி வாங்கியதில் வீடே நிசப்தமாகிப் போனது. தன் மகள் இறந்த அதிர்ச்சியில் ராதாவின் அப்பா கொஞ்சம், கொஞ்சமாக மனநிலை சரியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார். கொஞ்ச நாள் வீட்டை விட்டுக் காணாமல் போவதும், கொஞ்ச நாள் கழித்து திரும்ப வருவதுமாக இருந்தார். ஒருநாள் தன் குடும்பத்தை விட்டுக் காணாமல் போய்விட்டார்.
இன்று அவர் பழநியில் ஏதோ ஓர் இடத்தில் மனநிலை சரியில்லாதப் பிச்சைக்காரராக இருப்பதாகக் கேள்வி. தற்போது அவர் உயிருடன் இருப்பாரா என்பது கூட சந்தேகமே.
எத்தனையோக் கனவுகளுடன் சுற்றித் திரிய வேண்டிய ஒரு பெண், குழந்தையாக இருந்த போது தன் அம்மா செய்த முட்டாள்த்தனத்தால் இன்று இல்லாமல் போய்விட்டாள். இது போன்ற முட்டாள்த்தனங்களை செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்தக் கதை ஒரு பாடமாக இருக்கட்டும்.
ராதா கொஞ்சக் காலம் அவளுடைய அப்பாவுடனும், பாட்டி வீட்டிலும் வளர்ந்து வந்தாள். பாட்டி வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருந்த அவளுடைய சித்தி, மாமா, அத்தை போன்ற உறவினர்கள் சின்ன சின்ன எரிச்சலையும், அவ்வப்போது கோபத்தையும் அவள் மேல் காட்டிக் கொண்டிருந்தனர். சில வருடங்களுக்குப் பிறகு அவள் அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அதுவரை அம்மா, அம்மா என்று ஏங்கித்தவித்த ராதா புது அம்மா வரப்போவதை ஆசையாக எதிர்பார்த்தாள்.
புது அம்மா வந்து தன்னை ஆசை, ஆசையாகப் பார்த்துக் கொள்வாள் என்று எதிர்பார்த்திருந்த ராதாவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது. புது அம்மாவின் உத்தரவுப்படி வீட்டில் உள்ள அத்தனை வேலைகளையும் ராதாவே செய்தாள். வீட்டில் ஒரு மூலையில் இடம் கிடைத்த அந்தப் பெண்ணுக்கு, அந்தம்மாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தவுடன், வீட்டுத் திண்ணை அவளுக்குப் படுக்கை அறையாக மாறியது.
அதுவரை மாற்றாந்தாயின் கொடுமைகளைக் கேள்விக் கேட்கத் திராணியில்லாத ராதாவின் அப்பா அவள் மேல் மேலும் எரிச்சல் பட்டு அவளுடையப் பாட்டி வீட்டுக்குத் துரத்தி விட்டார். பாட்டி வீட்டுக்குப் போனால் அந்த வீட்டிலிருந்த அம்மாவின் உறவினர்கள் அவளைப் பாடாய்படுத்தினார்கள். ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்பதற்காக மட்டுமே இரு வீட்டு உறவினர்களும் அவளைக் காசில்லாத வேலைக்காரியாக வைத்திருந்தார்கள்.
இப்படியே எந்தப் பள்ளிக்கூடத்திற்கும் போகாமல் வீட்டு வேலை செய்து, மாற்றாந்தாய்க்குப் பிறந்த தன் தம்பிகளைக் கவனித்துக் கொண்டு அவளது வாழ்க்கை ஓடியது. அப்பாவின் கூடப்பிறந்த அக்கா, தங்கைகள் போன்ற உறவினர்கள் யாராவது அவளைப் பார்க்க வந்தால், "என்னை உங்கள் வீட்டு மருமகளாக்கிக் கொள்கிறீர்களா? நான் நல்லா வேலை செய்வேன் அத்தை. உங்கள் மேல் ரொம்ப அன்பா இருப்பேன். உங்களை நல்லாப் பார்த்துப்பேன்" என்றெல்லாம் கேட்டாள்.
எல்லோருக்கும் அவள் மேல் பரிதாபப்பட்டுக் காசு கொடுத்து விட்டு வரத் தெரிந்ததே தவிர அவளை மருமகளாகிக் கொள்ளும் துணிவில்லை. அவளை அந்த இடத்திலிருந்து தங்கள் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வரவும் தைரியமில்லை. அனைவருக்கும் வேறு வேறு வாழ்க்கை அதில் இவளை வேறு கூடவே வைத்துக்கொண்டு பிரச்சினையாக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.
உண்மையில் ராதா ரொம்பவும் அழகு. யார் வந்தாலும் அன்பாகப் பேசக்கூடியவள். அவள் உடம்பில் மாற்றாந்தாயான சித்தி கொடுத்த தீக்காயங்கள் ஏராளம்.
அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த ராதாவுக்கு அவள் பாட்டி வீட்டில் இருந்த தன் முறை மாமன் ஒருதலையாகக் காதலித்தான். ராதா அவன் காதலை ஏற்றுக்கொள்ள முடியாமல் மௌனமாகவே இருந்தாள். அவளுக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும். தன் மேல் அன்புக் காட்டக் கிடைத்திருக்கும் முதல் ஜீவன் என்று மனதிற்குள் மகிழ்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் "உன்னை என்னால் மறக்க முடியாது, உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டேன்" என்று உறுதியாக அவளிடம் கூறினான்.
திருமண விஷயத்தில் தன் மனதில் பட்டதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தாள். அதற்குள் அந்த முறைப்பையன் தனக்கும், அவளுக்கும் கல்யாண ஏற்பாடுகளை செய்யுமாறு வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டான். எவ்வளவோ வேண்டாம் என்றும் சொல்லியும் அவன் கேட்கவே இல்லை. கல்யாண விஷயத்தில் தன் அப்பாவின் தயவை எதிர்பார்த்ததில் அவரும் கைவிரித்து விட்டார்.
கல்யாண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போதே ராதா ரொம்பவும் பயந்து போனாள். இந்தத் திருமணம் நடந்தால் இதே வீட்டு சூழ்நிலையும், கொடுமைகளும் தன்னை வாழ்நாள் முழுதும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற எண்ணங்கள் மனதில் பாரமாக அழுத்த, இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவெடுத்து விஷம் சாப்பிட்டுத் தன் கதையை முடித்துக் கொண்டாள் அந்தப் பரிதாபப் பெண். அவள் இறந்த ஒரு வாரத்திலேயே ராதாவைக் காதலித்த முறைப்பையனும் சயனைடு சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
இரண்டு உயிர்களையும் பலி வாங்கியதில் வீடே நிசப்தமாகிப் போனது. தன் மகள் இறந்த அதிர்ச்சியில் ராதாவின் அப்பா கொஞ்சம், கொஞ்சமாக மனநிலை சரியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார். கொஞ்ச நாள் வீட்டை விட்டுக் காணாமல் போவதும், கொஞ்ச நாள் கழித்து திரும்ப வருவதுமாக இருந்தார். ஒருநாள் தன் குடும்பத்தை விட்டுக் காணாமல் போய்விட்டார்.
இன்று அவர் பழநியில் ஏதோ ஓர் இடத்தில் மனநிலை சரியில்லாதப் பிச்சைக்காரராக இருப்பதாகக் கேள்வி. தற்போது அவர் உயிருடன் இருப்பாரா என்பது கூட சந்தேகமே.
எத்தனையோக் கனவுகளுடன் சுற்றித் திரிய வேண்டிய ஒரு பெண், குழந்தையாக இருந்த போது தன் அம்மா செய்த முட்டாள்த்தனத்தால் இன்று இல்லாமல் போய்விட்டாள். இது போன்ற முட்டாள்த்தனங்களை செய்யும் ஒவ்வொருவருக்கும் இந்தக் கதை ஒரு பாடமாக இருக்கட்டும்.
Friday, 31 December 2010
புதுவருஷத்துக்கு என்ன செய்யலாம்?
இதோ இன்னும் சிறிது நேரத்தில் புது வருடம் பிறக்கப்போகிறது. புது வருடம் எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான், அன்று என் அண்ணனின் பிறந்த நாளும் கூடவே வருவதால்.
ஒவ்வொரு புது வருஷம் பிறக்கும் போதும் இந்த வருஷத்திலிருந்தாவது இந்த இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் எனற எண்ணம் நம் எல்லோருக்கும் இருக்கும்.
ஆனால் அதைக் கொஞ்சமாக முயற்சி செய்து பார்க்கவே சில மாதங்கள் தேவைப்படும். அதான் அடுத்த வருஷம் இருக்கே என்று அப்பப்போ மனதுக்குள் ஒரு அலாரம் வேறு அடித்துத் தொலைக்கும் (கெட்ட மனசாட்சி...சே!)
அந்த அலாரத்துடன் ஒரு சில மாதங்கள் ஓடும். அந்த அலாரம் நன்றாக ஆணி அடித்து உட்கார்ந்துக் கொண்டு, நீ இத செஞ்சா உன்னோட இமேஜ் என்ன ஆவது? என்று நம்மை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும்.
அதில் சில மாதங்கள் போய்விடும் போது அடுத்த வருஷத்தில நாம இதக் கண்டிப்பா ஃபாலோ செய்யலாம் என்று சமர்த்தாக மனசாட்சி படுத்துக்கொள்ளும்.
புதுவருஷம் எதுக்குப் பயன்படுதோ இல்லையோ இதுக்குத்தான் ரொம்பவும் யூஸ் ஆகுது. ஓகே.. இந்தப் புது வருஷத்தில இருந்து யார் யார் எந்தெந்தப் பழக்கத்த விடணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...
1. கூட இருக்கறவங்க அழுதுக்கிட்டோ, திட்டிக்கிட்டோ இருக்கும் போது ஏன் இப்படி என்னைய பாடாய்படுத்திறீங்கன்னு அபத்தமா கேள்வி எல்லாம் கேட்காம, ஏதாச்சும் பெரிசா ஆயிடப்போகுதுன்னு ஒரு டம்ளர் தண்ணிக் கொடுத்து கூல் பண்ணுங்க. தண்ணிக் கொடுத்தா தெம்பா உட்கார்ந்து அழவோ, திட்டவோ செய்வாங்கன்னு விபரீதமா யோசிச்சுத் தொலைக்காதீங்க.
2. but ஆனால், so அதனால (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு யாராச்சும் சொல்லுங்க), ஆங்ங்.... like ஆங்ங்.... like இந்த மாதிரி இங்கிலீசுல பீட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு விடுறவங்க கொஞ்சமாவது அதக் கேட்கறவங்க நெலைமைய நினைச்சுப் பாருங்க...
3. நைட்டியோட மெயின் ரோடு வரைக்கும் போறப் பெண்களும், ஷாட்ஸ் போட்டுட்டு பைக் ஓட்டிட்டுக் கெட்ட அலப்பறய விடுற ஆண்களும் இந்த வருஷத்திலாவது அதை மாத்திக்கிட்டா மக்களுக்கு நல்லது.
4. ரொம்ப சூப்பரா சமைக்கிறவங்க எல்லாம் வெங்காயம், தக்காளி எல்லாம் போடாத சுமாரான சமையலைப் பழகிக்கறது வீட்டுக்கு நல்லது.
5. மிஸ்டு கால் கொடுத்தேப் பழக்கப்பட்டவங்க இனிமேலாவது கால் பண்ணிப் பேசணும்னு நினைங்க.
6. குழந்தைங்க சொல் பேச்சுக் கேட்டு அவங்களப் பெத்தவங்க கொஞ்சம் அவங்ககிட்ட மரியாதையா நடந்து, பெற்றோர்கள் சங்கத்தோட மானத்தக் காப்பாத்துங்க.
7. முப்பது வயசுக்கு மேல இருக்கறவங்க உங்க சம்பளத்தில இருந்து ஒரு பகுதியை உங்களோட ரெகுலர் மெடிக்கல் செக்கப்புக்கு ஒதுக்கி, டாக்டர்ஸ்-க்கு வாழ்வு கொடுங்க.
8. இனிமேலாவது டாய்லெட்டுக்குப் போகும்போதும், புத்தகத்தை கூடவே எடுத்துக்கிட்டுப் போய் 'நீங்க பெரிய புத்தகப்புழு' , 'பெரிய அறிவாளி' அப்படியெல்லாம் சொல்லவச்சு மத்தவங்க வாய நாறடிக்காதீங்க.
9. மத்தவீட்ல நடக்கிற பஞ்சாயத்தப் பார்க்கிறதுக்கு முன்னாடி, நம்ம வீட்டுப் பஞ்சாயத்தக் கொஞ்சம் மனசில வச்சுக்கோங்க.
10. கடைசியா மனசுக்குள்ளேயே வச்சிருக்கிற அன்பையும், பாராட்டையும் நம்ம கூட இருக்கறவங்களுக்கு அள்ளி, அள்ளிக் கொடுங்க.
HAPPY NEW YEAR 2011!
ஒவ்வொரு புது வருஷம் பிறக்கும் போதும் இந்த வருஷத்திலிருந்தாவது இந்த இந்தப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் எனற எண்ணம் நம் எல்லோருக்கும் இருக்கும்.
ஆனால் அதைக் கொஞ்சமாக முயற்சி செய்து பார்க்கவே சில மாதங்கள் தேவைப்படும். அதான் அடுத்த வருஷம் இருக்கே என்று அப்பப்போ மனதுக்குள் ஒரு அலாரம் வேறு அடித்துத் தொலைக்கும் (கெட்ட மனசாட்சி...சே!)
அந்த அலாரத்துடன் ஒரு சில மாதங்கள் ஓடும். அந்த அலாரம் நன்றாக ஆணி அடித்து உட்கார்ந்துக் கொண்டு, நீ இத செஞ்சா உன்னோட இமேஜ் என்ன ஆவது? என்று நம்மை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும்.
அதில் சில மாதங்கள் போய்விடும் போது அடுத்த வருஷத்தில நாம இதக் கண்டிப்பா ஃபாலோ செய்யலாம் என்று சமர்த்தாக மனசாட்சி படுத்துக்கொள்ளும்.
புதுவருஷம் எதுக்குப் பயன்படுதோ இல்லையோ இதுக்குத்தான் ரொம்பவும் யூஸ் ஆகுது. ஓகே.. இந்தப் புது வருஷத்தில இருந்து யார் யார் எந்தெந்தப் பழக்கத்த விடணும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...
1. கூட இருக்கறவங்க அழுதுக்கிட்டோ, திட்டிக்கிட்டோ இருக்கும் போது ஏன் இப்படி என்னைய பாடாய்படுத்திறீங்கன்னு அபத்தமா கேள்வி எல்லாம் கேட்காம, ஏதாச்சும் பெரிசா ஆயிடப்போகுதுன்னு ஒரு டம்ளர் தண்ணிக் கொடுத்து கூல் பண்ணுங்க. தண்ணிக் கொடுத்தா தெம்பா உட்கார்ந்து அழவோ, திட்டவோ செய்வாங்கன்னு விபரீதமா யோசிச்சுத் தொலைக்காதீங்க.
2. but ஆனால், so அதனால (ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு யாராச்சும் சொல்லுங்க), ஆங்ங்.... like ஆங்ங்.... like இந்த மாதிரி இங்கிலீசுல பீட்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு விடுறவங்க கொஞ்சமாவது அதக் கேட்கறவங்க நெலைமைய நினைச்சுப் பாருங்க...
3. நைட்டியோட மெயின் ரோடு வரைக்கும் போறப் பெண்களும், ஷாட்ஸ் போட்டுட்டு பைக் ஓட்டிட்டுக் கெட்ட அலப்பறய விடுற ஆண்களும் இந்த வருஷத்திலாவது அதை மாத்திக்கிட்டா மக்களுக்கு நல்லது.
4. ரொம்ப சூப்பரா சமைக்கிறவங்க எல்லாம் வெங்காயம், தக்காளி எல்லாம் போடாத சுமாரான சமையலைப் பழகிக்கறது வீட்டுக்கு நல்லது.
5. மிஸ்டு கால் கொடுத்தேப் பழக்கப்பட்டவங்க இனிமேலாவது கால் பண்ணிப் பேசணும்னு நினைங்க.
6. குழந்தைங்க சொல் பேச்சுக் கேட்டு அவங்களப் பெத்தவங்க கொஞ்சம் அவங்ககிட்ட மரியாதையா நடந்து, பெற்றோர்கள் சங்கத்தோட மானத்தக் காப்பாத்துங்க.
7. முப்பது வயசுக்கு மேல இருக்கறவங்க உங்க சம்பளத்தில இருந்து ஒரு பகுதியை உங்களோட ரெகுலர் மெடிக்கல் செக்கப்புக்கு ஒதுக்கி, டாக்டர்ஸ்-க்கு வாழ்வு கொடுங்க.
8. இனிமேலாவது டாய்லெட்டுக்குப் போகும்போதும், புத்தகத்தை கூடவே எடுத்துக்கிட்டுப் போய் 'நீங்க பெரிய புத்தகப்புழு' , 'பெரிய அறிவாளி' அப்படியெல்லாம் சொல்லவச்சு மத்தவங்க வாய நாறடிக்காதீங்க.
9. மத்தவீட்ல நடக்கிற பஞ்சாயத்தப் பார்க்கிறதுக்கு முன்னாடி, நம்ம வீட்டுப் பஞ்சாயத்தக் கொஞ்சம் மனசில வச்சுக்கோங்க.
10. கடைசியா மனசுக்குள்ளேயே வச்சிருக்கிற அன்பையும், பாராட்டையும் நம்ம கூட இருக்கறவங்களுக்கு அள்ளி, அள்ளிக் கொடுங்க.
HAPPY NEW YEAR 2011!
Monday, 6 December 2010
எனர்ஜி!
என் வாழ்வின்
அத்தனைக் கஷ்டங்களும்
அத்தனைத் துயரங்களும்
அத்தனைக் கோபங்களும்
அத்தனை வலிகளும்
அத்தனை சலிப்புகளும்
உன் ஆறுதலான ஒற்றை வார்த்தையில் அடங்கிப் போய்விடுகிறதே!
அது உன் மனதில் இருந்து வராமல்
வெறும் வாய் வார்த்தையாக வந்தாலும் கூட
அதுவே என் ஒவ்வொரு நாளின் எனர்ஜிப் பக்கமாய் மாறும்
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்...
Tuesday, 30 November 2010
பெண் மனசு - தொடர்பதிவு
வெறும்பய ஜெயந்த் 'பெண் மனசு' என்ற தலைப்பில் பெண் குரலில் பாடியப் பாடல்களின் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த ஜெயந்த்துக்கு நன்றி!
பெண் மனதில் எனக்குப் பிடித்தப் பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதைத் தொடர்கிறேன்.
பாம்பே ஜெயஸ்ரீயின் வசீகரக் குரலில் இளையராஜாவின் அற்புதமான இசையில் உருவானப் பாடல்.
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாதென..
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம்
நாமறியோம் நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
இந்த ஒரு பாடலுக்காகவே நின்னைச் சரணடைந்தேன் என்று இளையராஜாவின் காலில் விழுந்து விடலாம். பாடலின் ஒவ்வொரு வரியும் மனதை விட்டு நீங்காதவை என்றும்.
சித்ரா பாடிய இந்தப்பாடல் காதலனை நினைத்துப் பாடும் ஒரு அழகானப் பெண்மனதைக் கொண்டுவந்துவிடும்.
சோர்ந்து போகும் மனதுக்கு ஆறுதலாக அமையக்கூடியப் பாடல். ஸ்ரேயா கோஷல் அழகாகப் பாடியிருப்பார்.
4. காலைத் தென்றலில் எத்தனை சந்தங்கள் - மங்கை ஒரு கங்கை
சுதந்திரமான மனதுடன் இயற்கையை ரசிக்கும் பெண் மனம். ஜானகியின் குரலில் வரும் அற்புதமான வரிகள்...
"அதோ அந்தப் புதுமலர் நானாகும் போது
அதை விட பெரும் சுகம் நான் காண்பதேது.. "
பாடல் வரிகளில் நாமும் இயற்கையோடுக் கலந்து விடலாம். இந்தப் பாடலுக்கான லிங்க் எங்கு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை.
சித்ராவைத் தவிர இந்தப் பாடல் வேறு யார் பாடியிருந்தாலும் அது இனிக்குமா? தெரியவில்லை. தன் காதலை ஏற்றுக் கொள்வதற்காகக் காதலனிடம் வேண்டும் பெண் மனம்.
குழந்தைகளுடன் குதூகலமாக இருக்கும் போது மனதிற்கு எவ்வளவு சந்தோஷம்!
"சிங்காரப் பிள்ளை என்றால் கண்ணார உன்னைக் கண்டால் சந்தோஷம் நெஞ்சில் பொங்குதம்மா..."
சித்ரா பாடிய இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் நானும் குழந்தையோடு குழந்தையாக மாறி விடுவதுண்டு.
ஜானகி பாடிய இந்தப்பாடலில் கணவனை இழந்தப் பெண்ணின் உணர்வுகளை, பாடல் வரிகளுடன் நாட்டியத்திலும் அழகாக வெளிப்படுத்தியிருப்பார் நடிகை ரேவதி.
இந்தப் பாடலைப் பாடும் பெண்ணின் மனதையும், பெண்ணின் குரலையும் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா?
இசைக்கு அடிமையானப் பெண்ணின் மனம். ஜானகி அழகாகப் பாடியிருப்பார்.
அழகான வாழ்க்கையைக் கொண்டுவரும் பெண் மனம். சுதா இரகுநாதன் பாடியது. எனக்கு மிகவும் பிடித்தப் பாடல் இது.
இன்னும் நிறையப் பாடல்கள் பெண் மனதில், பெண் குரலில் இருக்கிறது. உங்களுக்காக எனக்குப் பிடித்தப் பத்துப் பாடல்களை மட்டும் பதிவில் கொடுத்திருக்கிறேன்.
எனக்குப் பிடித்த இந்தப் பாடல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று
நினைக்கிறேன்.
Labels:
இசை,
தொடர்பதிவு,
பிடித்தப் பாடல்கள்,
பெண் குரல்,
பெண் மனம்
Wednesday, 24 November 2010
அய்யோ! குழந்தைகளின் குத்தாட்டம்
வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு 5 நிமிட இடைவெளியில் வேறு ஒரு சேனலில் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. அந்த நடனப் போட்டியில் குழந்தைகள் ஆடிய ஆட்டம்.. அடடா! அது ஆட்டமே அல்ல, குத்தாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் குத்தாட்டத்தில் கூட குழந்தைகளின் மழலைத்தனமும், நளினமும் இல்லை.
அவர்களின் வயதைத் தாண்டிய விரசமான பாடல் வரிகளுடன் அவர்கள் ஆடிய விதமும், அந்தப் பாடல் வரிகளுக்குக் காட்டிய எக்ஸ்ப்ரஷன்களும் பார்க்க சகிக்க முடியவில்லை. ஒரு ஆறு, ஏழு வயதுக்கே உரியக் குழந்தைத்தனம் அவர்களிடம் காணாமல் போயிருந்தது.
இதில் குழந்தைகளிடம் உள்ளக் குறைகளை விடப் பெற்றோர்களின் குறைகளேப் பெரிதாகத் தெரிந்தது. இது போன்றப் பாடல்களைத் தேர்வு செய்து, அதற்கு நடனப் பயிற்சியும் கொடுத்து, அதை ரசிக்கவும் ஒரு பெற்றோரால் எப்படி முடிகிறது என்றுதான் தெரியவில்லை.
இது போன்ற நடன நிகழ்ச்சிகளில் அவர்கள் அணியும் உடை அதை விடக் கொடுமை. 'கொழுக், மொழுக்' என்று இருக்கும் குழந்தைகளுக்கு கூட அவர்கள் உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அணியாமல்.... என்னக் கொடுமைங்க இது?
சின்னப் பய..புள்ளைங்க எல்லாம் இப்படி கெளம்பிடுச்சுகளே.. நெனைச்சாலே ரொம்ப வேதனையான ஃபீலிங்காத்தான் இருக்கு. ஒருவேளை குழந்தைகளுக்கு எதிராக நாட்டில் நடக்கும் அத்தனை வக்கிரங்களுக்கும் ஆரம்பப்புள்ளி இங்கதான் இருக்கோ?
போட்டியின் இறுதியில் நடுவராக உட்கார்ந்திருப்பவர்கள் கொடுத்தக் கமெண்ட்ஸ் என்னத் தெரியுமா? "உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆச்சு. சூப்பர்!"
கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி-ங்கிறாங்களே....அப்படின்னா என்ன?
கடவுள் சாட்சியா, அக்னி சாட்சியா, பெற்றோர்கள் சாட்சியா, உறவினர்கள் சாட்சியா மற்றும் எல்லோருடைய சாட்சியா (ஷ்ஷ்..அப்பா! ப்ளாக்ல எழுத ஆரம்பிச்சாலே ஒரு வார்த்தைக்கு எத்தனை பில்டப் கொடுக்க வேண்டியதிருக்கு..) ஒருத்தருக்கொருத்தர் கையைப் புடிச்சுக் குடும்பம் நடத்தறக் கணவன், மனைவிக்கு அமையாத கெமிஸ்ட்ரி, டான்ஸ் ஆடற சின்னக் குழந்தைங்களுக்குக் கூட அமையறதா சொல்றாங்களே... அதென்ன கெமிஸ்ட்ரி?
விவரம் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா!
அவர்களின் வயதைத் தாண்டிய விரசமான பாடல் வரிகளுடன் அவர்கள் ஆடிய விதமும், அந்தப் பாடல் வரிகளுக்குக் காட்டிய எக்ஸ்ப்ரஷன்களும் பார்க்க சகிக்க முடியவில்லை. ஒரு ஆறு, ஏழு வயதுக்கே உரியக் குழந்தைத்தனம் அவர்களிடம் காணாமல் போயிருந்தது.
இதில் குழந்தைகளிடம் உள்ளக் குறைகளை விடப் பெற்றோர்களின் குறைகளேப் பெரிதாகத் தெரிந்தது. இது போன்றப் பாடல்களைத் தேர்வு செய்து, அதற்கு நடனப் பயிற்சியும் கொடுத்து, அதை ரசிக்கவும் ஒரு பெற்றோரால் எப்படி முடிகிறது என்றுதான் தெரியவில்லை.
இது போன்ற நடன நிகழ்ச்சிகளில் அவர்கள் அணியும் உடை அதை விடக் கொடுமை. 'கொழுக், மொழுக்' என்று இருக்கும் குழந்தைகளுக்கு கூட அவர்கள் உடலமைப்புக்கு ஏற்ற உடைகளை அணியாமல்.... என்னக் கொடுமைங்க இது?
சின்னப் பய..புள்ளைங்க எல்லாம் இப்படி கெளம்பிடுச்சுகளே.. நெனைச்சாலே ரொம்ப வேதனையான ஃபீலிங்காத்தான் இருக்கு. ஒருவேளை குழந்தைகளுக்கு எதிராக நாட்டில் நடக்கும் அத்தனை வக்கிரங்களுக்கும் ஆரம்பப்புள்ளி இங்கதான் இருக்கோ?
போட்டியின் இறுதியில் நடுவராக உட்கார்ந்திருப்பவர்கள் கொடுத்தக் கமெண்ட்ஸ் என்னத் தெரியுமா? "உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆச்சு. சூப்பர்!"
கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி-ங்கிறாங்களே....அப்படின்னா என்ன?
கடவுள் சாட்சியா, அக்னி சாட்சியா, பெற்றோர்கள் சாட்சியா, உறவினர்கள் சாட்சியா மற்றும் எல்லோருடைய சாட்சியா (ஷ்ஷ்..அப்பா! ப்ளாக்ல எழுத ஆரம்பிச்சாலே ஒரு வார்த்தைக்கு எத்தனை பில்டப் கொடுக்க வேண்டியதிருக்கு..) ஒருத்தருக்கொருத்தர் கையைப் புடிச்சுக் குடும்பம் நடத்தறக் கணவன், மனைவிக்கு அமையாத கெமிஸ்ட்ரி, டான்ஸ் ஆடற சின்னக் குழந்தைங்களுக்குக் கூட அமையறதா சொல்றாங்களே... அதென்ன கெமிஸ்ட்ரி?
விவரம் தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்கப்பா!
Labels:
குழந்தைகளின் நடனம்,
சமூகம்,
தொலைக்காட்சி,
பெற்றோர்
Sunday, 14 November 2010
அவசரச் சட்டமும், அவசியமானப் பாதுகாப்பும் வேண்டும்
இரண்டு வாரங்களுக்கும் மேல் பதிவுலகம் பக்கம் வரமுடியவில்லை. கோவையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு குழந்தை மீது அதிக கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது. குழந்தையை தினமும் ஸ்கூலுக்கு அனுப்பும் போது கூடவே இருந்து கூட்டிக்கொண்டு வர வேண்டிய கட்டாயம். அதை எத்தனை நாள் தொடர முடியும்?
வேன் டிரைவரிலிருந்து அவருக்கு உதவியாக இருக்கும் ஆள் வரை அனைவர் மீதும் ஒரு சந்தேகப்பார்வையுடன் தான் இருக்க வேண்டியதிருக்கிறது. யாராவது குழந்தையுடன் சிரித்துப் பேசினால் கூட இவன் எப்படிப்பட்டவனாக இருப்பானோ என்ற பயம் என்னையுமறியாமல் தொற்றிக்கொள்கிறது. இந்த பயம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் எல்லாப் பெற்றோர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவள் படிக்கிறாளோ இல்லையோ பாதுகாப்பாக வீட்டுக்கு வந்தால் போதும் என்கிற மனநிலையில் தான் இருக்கிறார்கள்.
கோவையில் நடந்தக் கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, அனைவரது மனதிலும் ஆவேசங்களும், வருத்தங்களும் இருந்தது. அந்த ஆவேசங்களும், வருத்தங்களும் ஒரு என்கவுன்ட்டரில் முடிந்து விட்டது. ஆனால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது நம் நாட்டில்? ஒரு என்கவுன்ட்டரினால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் முடிந்து விடுமா?
எல்லாத் தவறுகளையும் சுதந்திரமாக செய்ய முடிகிற வெளிநாட்டில் கூட குழந்தைகள் மீது கை வைத்தால் அதற்கானத் தண்டனை மிகக்கொடூரமாகத்தான் இருக்கிறது. ஆனால் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சிகளாய் சுற்றித்திரியும் நம் குழந்தைகள் பாதுகாப்பில்லாத ஒரு உலகத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது கோபப்படாமல் இருக்க முடியவில்லை.
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கக் கடுமையானச் சட்டம் கொண்டுவராத வரை, பெற்றோர்கள் மனதில் உள்ள பயம் நீங்கப்போவதில்லை.
இத்தனைப் பிரச்சினைகள் நாட்டில் தலைவிரித்தாடும் போது, இரண்டு கிரவுண்டு நிலம் வழங்குவதற்காக சட்டசபையில் வாதிடுவோருக்கு முதலில் ஒரு என்கவுன்ட்டர் நடத்தினால் நாடு உருப்படும்.
வேன் டிரைவரிலிருந்து அவருக்கு உதவியாக இருக்கும் ஆள் வரை அனைவர் மீதும் ஒரு சந்தேகப்பார்வையுடன் தான் இருக்க வேண்டியதிருக்கிறது. யாராவது குழந்தையுடன் சிரித்துப் பேசினால் கூட இவன் எப்படிப்பட்டவனாக இருப்பானோ என்ற பயம் என்னையுமறியாமல் தொற்றிக்கொள்கிறது. இந்த பயம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் எல்லாப் பெற்றோர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவள் படிக்கிறாளோ இல்லையோ பாதுகாப்பாக வீட்டுக்கு வந்தால் போதும் என்கிற மனநிலையில் தான் இருக்கிறார்கள்.
கோவையில் நடந்தக் கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, அனைவரது மனதிலும் ஆவேசங்களும், வருத்தங்களும் இருந்தது. அந்த ஆவேசங்களும், வருத்தங்களும் ஒரு என்கவுன்ட்டரில் முடிந்து விட்டது. ஆனால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது நம் நாட்டில்? ஒரு என்கவுன்ட்டரினால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் முடிந்து விடுமா?
எல்லாத் தவறுகளையும் சுதந்திரமாக செய்ய முடிகிற வெளிநாட்டில் கூட குழந்தைகள் மீது கை வைத்தால் அதற்கானத் தண்டனை மிகக்கொடூரமாகத்தான் இருக்கிறது. ஆனால் சின்னஞ்சிறு பட்டாம்பூச்சிகளாய் சுற்றித்திரியும் நம் குழந்தைகள் பாதுகாப்பில்லாத ஒரு உலகத்தில் தான் வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது கோபப்படாமல் இருக்க முடியவில்லை.
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்கக் கடுமையானச் சட்டம் கொண்டுவராத வரை, பெற்றோர்கள் மனதில் உள்ள பயம் நீங்கப்போவதில்லை.
இத்தனைப் பிரச்சினைகள் நாட்டில் தலைவிரித்தாடும் போது, இரண்டு கிரவுண்டு நிலம் வழங்குவதற்காக சட்டசபையில் வாதிடுவோருக்கு முதலில் ஒரு என்கவுன்ட்டர் நடத்தினால் நாடு உருப்படும்.
Wednesday, 27 October 2010
தனிமையில் இளையராஜா
இந்த உலகத்திலேயே நீ வெறுக்கும் முதல் விஷயம் எது என்று யாராவது என்னிடம் கேட்டால் உடனே என்னிடமிருந்து வரும் வார்த்தை தனிமை என்பது தான்.
நான் அறிந்தவரை, தனிமை பலருக்கும் பிடித்தமான விஷயமாகத்தான் இருக்கிறது. தனிமையில் இருக்கும் போது தான் எனக்கு கவிதை எழுத வருகிறது, நிதானமாக யோசிக்க முடிகிறது என்றெல்லாம் பலபேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
நான் தனிமையில் இருக்கும் போது என்றைக்கோ பார்த்த திகில் படங்களும், ஏதோ ஒரு நாளில் யாரிடமோ போட்ட சண்டையும் தான் நினைவுக்கு வரும். கூடவே வாழ்க்கையில் ஏற்படும் சலிப்புகளும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் கூட மனதைப்போட்டு அழுத்தும். என்னைப் பொறுத்தவரை, தனிமை மனதில் பாரத்தை மட்டும் தான் கொடுக்கிறது,
நான் கொடுமையாக நினைக்கும் அந்தத் தனிமையில் கூட எனக்கு கேட்கப் பிடிக்கும் ஒரே விஷயம் இசை மட்டும் தான். அதுவும் இளையராஜாவின் பாடல்கள் என்றால் மனதில் ஏற்படும் ஒருவிதமான சுகம் இருக்கிறதே. ஆஹா! அதை வார்த்தையால் சொல்லவே முடியாது. அவருடைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேலை செய்யும் போது எந்த வேலையும் எனக்கு கஷ்டமாகத் தெரிந்ததில்லை. சொல்லப்போனால் மிகவும் சீக்கிரமாகவே அந்த வேலையை முடித்துவிட முடியும்.
அந்த இசையே 'டொம் டொம்' என்ற சத்தத்துடன் (இப்போது வரும் குத்துப்பாடல்கள் போல்) இருந்தால் தனிமையில் அந்த இசையேப் பெரும் தலைவலிதான்.
பள்ளிப்பாடங்களைப் படிக்கும்போது கூட, அனைவரும் தனியாக உட்கார்ந்து படித்தால் தான் மண்டையில் ஏறும் என்றெல்லாம் சொன்னதுண்டு. ஆனால் என்னால் அப்படி படிக்கப் பிடித்ததே இல்லை. தனியாக உட்கார்ந்து புத்தகத்தை விரித்தாலே என்னுடைய சிந்தனை வேறு பக்கம் போய்விடும். அப்போது இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டேப் படித்தால் தான் அந்தப் பாடம் என் மண்டையில் சீக்கிரம் ஏறும்.
அப்படிப் பாடல்களைக் கேட்டுக்கொண்டேப் படிக்கும்போது நான் தனிமையில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை. செய்யும் வேலையும் கஷ்டமாகத் தெரிந்ததில்லை. தூங்கும் போது கூட இரவு பத்து மணிக்கு மேல் ஃஎப்.ஃஎம்மில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அப்போது அன்றாடம் மனதில் ஏற்படும் வலி கூட இல்லாமல் போகிறது. அவருடைய மெலடிகளால் மனதில் ஒரு துள்ளல்.
எப்போது டாம் அண்ட் ஜெர்ரி போல் முட்டிக்கொண்டிருக்கும் நானும், என் கணவரும் ஒத்துப்போகும் ஒரே விஷயம் இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதில் மட்டும்தான். எங்கள் இருவருக்கும் சண்டை முத்திப்போனால் அப்போது உடனே எங்கள் இருவருக்கும் பிடிக்கும் இளையராஜாவின் பாடல்களைப் போட்டுவிடுவேன். உடனே இருவரும் சண்டையை மறந்து அந்தப் பாடல்களைக் கேட்பதில் மும்முரமாகிவிடுவோம்.
என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இளையராஜாவின் மெட்டுக்கள் மருந்தாகவே அமைந்திருக்கிறது.
இப்போது வரும் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமே சலிப்பையும் தந்து விடுகிறது, சில நேரங்களில் சில பாடல்கள் தலைவலியையும் சேர்த்துக் கொடுத்துவிடுகிறது. மனதில் நிற்கும் பாடல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
தனிமையிலே இனிமை காண முடியுமா? என்று கேட்டால் என்னுடையத் தனிமையில் இளையராஜாவின் பாடல்களால் மட்டுமே இனிமையைக் காண முடியும்.
நான் அறிந்தவரை, தனிமை பலருக்கும் பிடித்தமான விஷயமாகத்தான் இருக்கிறது. தனிமையில் இருக்கும் போது தான் எனக்கு கவிதை எழுத வருகிறது, நிதானமாக யோசிக்க முடிகிறது என்றெல்லாம் பலபேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
நான் தனிமையில் இருக்கும் போது என்றைக்கோ பார்த்த திகில் படங்களும், ஏதோ ஒரு நாளில் யாரிடமோ போட்ட சண்டையும் தான் நினைவுக்கு வரும். கூடவே வாழ்க்கையில் ஏற்படும் சலிப்புகளும் அதனால் ஏற்பட்ட சங்கடங்களும் கூட மனதைப்போட்டு அழுத்தும். என்னைப் பொறுத்தவரை, தனிமை மனதில் பாரத்தை மட்டும் தான் கொடுக்கிறது,
நான் கொடுமையாக நினைக்கும் அந்தத் தனிமையில் கூட எனக்கு கேட்கப் பிடிக்கும் ஒரே விஷயம் இசை மட்டும் தான். அதுவும் இளையராஜாவின் பாடல்கள் என்றால் மனதில் ஏற்படும் ஒருவிதமான சுகம் இருக்கிறதே. ஆஹா! அதை வார்த்தையால் சொல்லவே முடியாது. அவருடைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேலை செய்யும் போது எந்த வேலையும் எனக்கு கஷ்டமாகத் தெரிந்ததில்லை. சொல்லப்போனால் மிகவும் சீக்கிரமாகவே அந்த வேலையை முடித்துவிட முடியும்.
அந்த இசையே 'டொம் டொம்' என்ற சத்தத்துடன் (இப்போது வரும் குத்துப்பாடல்கள் போல்) இருந்தால் தனிமையில் அந்த இசையேப் பெரும் தலைவலிதான்.
பள்ளிப்பாடங்களைப் படிக்கும்போது கூட, அனைவரும் தனியாக உட்கார்ந்து படித்தால் தான் மண்டையில் ஏறும் என்றெல்லாம் சொன்னதுண்டு. ஆனால் என்னால் அப்படி படிக்கப் பிடித்ததே இல்லை. தனியாக உட்கார்ந்து புத்தகத்தை விரித்தாலே என்னுடைய சிந்தனை வேறு பக்கம் போய்விடும். அப்போது இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டேப் படித்தால் தான் அந்தப் பாடம் என் மண்டையில் சீக்கிரம் ஏறும்.
அப்படிப் பாடல்களைக் கேட்டுக்கொண்டேப் படிக்கும்போது நான் தனிமையில் இருப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை. செய்யும் வேலையும் கஷ்டமாகத் தெரிந்ததில்லை. தூங்கும் போது கூட இரவு பத்து மணிக்கு மேல் ஃஎப்.ஃஎம்மில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருப்பேன். அப்போது அன்றாடம் மனதில் ஏற்படும் வலி கூட இல்லாமல் போகிறது. அவருடைய மெலடிகளால் மனதில் ஒரு துள்ளல்.
எப்போது டாம் அண்ட் ஜெர்ரி போல் முட்டிக்கொண்டிருக்கும் நானும், என் கணவரும் ஒத்துப்போகும் ஒரே விஷயம் இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதில் மட்டும்தான். எங்கள் இருவருக்கும் சண்டை முத்திப்போனால் அப்போது உடனே எங்கள் இருவருக்கும் பிடிக்கும் இளையராஜாவின் பாடல்களைப் போட்டுவிடுவேன். உடனே இருவரும் சண்டையை மறந்து அந்தப் பாடல்களைக் கேட்பதில் மும்முரமாகிவிடுவோம்.
என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் இளையராஜாவின் மெட்டுக்கள் மருந்தாகவே அமைந்திருக்கிறது.
இப்போது வரும் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சீக்கிரமே சலிப்பையும் தந்து விடுகிறது, சில நேரங்களில் சில பாடல்கள் தலைவலியையும் சேர்த்துக் கொடுத்துவிடுகிறது. மனதில் நிற்கும் பாடல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
தனிமையிலே இனிமை காண முடியுமா? என்று கேட்டால் என்னுடையத் தனிமையில் இளையராஜாவின் பாடல்களால் மட்டுமே இனிமையைக் காண முடியும்.
Tuesday, 12 October 2010
மூன்று பெண்கள்; மூன்று வேறு கதைகள்
முதல் கதை
இவளுக்கு திருமணமாகி எட்டு வருடங்களாக குழந்தை இல்லாதக் காரணத்தால் குடும்பத்தில் பிரச்சினை. யாரிடம் என்ன குறை? அதை தீர்ப்பதற்கு என்ன வழி என்ற சிந்தனையெல்லாம் இல்லை. அதனால் பிரச்சினை முத்திப்போனதில் அவள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாள். தற்கொலை செய்யும் அளவுக்கு மனதைக் காயப்படுத்திய வார்த்தைகள் என்ன என்பது எங்கள் யாருக்கும் இன்னும் விடை தெரியாத கேள்வி? இத்தனைக்கும் அவள் மிகவும் பொறுமைசாலி. எங்களுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்து, ஒரே ரூமில் கிண்டல் பேசி, விளையாடி, சிரித்து மகிழ்ந்த எங்கள் தோழி இன்று உயிருடன் இல்லை. எங்கள் நட்பு வட்டத்தில் முதலில் திருமணம் செய்தவளும் இவள்தான். குடும்பத்தில் அவளுக்கு நிறைய மனக்கசப்புகள் இருந்ததாக மற்றத் தோழிகள் சொன்னார்கள். அவள் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல.. அவள் கணவனே அவளைக் கொலை செய்திருப்பான் என்று அனைவரும் சொன்னார்கள். என்னால் அப்படி யூகிக்க முடியவில்லை. இழப்பு இரண்டு பக்கமும்தான். மனம் விட்டு பேச முடியாமல் இருந்தாளா? பேசியும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழி தெரியாமல் மனதிற்குள்ளேயே குழம்பிக் கொண்டிருந்தாளா? தெரியவில்லை. ஆனால் கல்லூரி படிக்கும் வயதில் எத்தனையோ கனவுகளுடன் சிரித்து விளையாடிய தோழி இன்று இல்லையே...
இரண்டாவது கதை
ஆயிரம் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் திருமணம் செய்து கொண்டவள் திருமணமாகிய மூன்றே மாதத்தில் வரதட்சணை என்ற பெயரில் கஷ்டத்தை அனுபவித்தாள். அதுவும் மாமனார், மாமியாரால் அல்ல.. தன் கணவனாலேயே அந்தக் கஷ்டத்தை அனுபவித்த போது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
தன் மனைவியின் அண்ணங்கள் இருவருக்கும் சொந்த வீடு இருந்ததைப்போல, தனக்கும் ஒரு வீடு கொடுப்பார்கள் என்று கனவுக்கோட்டை கட்டிக்கொண்டு வந்த மாப்பிள்ளை அது இல்லாமல் போகவே அவளை கொஞ்சம், கொஞ்சமாக டார்ச்சர் செய்ய, தாங்க முடியாமல் திருமணமாகிய ஒன்பதே மாதத்தில் விவகாரத்தாகி விட்ட்து. அத்தனைக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டுதான் இருந்தேன். அவனுடன் வாழத்தான் ஆசைப்பட்டேன். அவன் கொடுத்தக் கஷ்டத்தைத் தாங்க முடியாமல் அம்மா வீட்டுக்கு ஓடிப்போய் ஏதாவது வாங்கி வருவேன் என்று நினைத்திருந்தான். ஆனால் நான் அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவனுக்கு பேலன்ஸாக இருந்ததால் அவனால் பொறுக்க முடியவில்லை. கடைசி வரை என்னுடன் வாழவே வாய்ப்புக் கொடுத்தேன். ஆனால் அந்த வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ள அவனுக்குத் தெரியவில்லை.
கோர்ட்டில் கூட நான் கொண்டு வந்த அத்தனை சீர் வரிசையையும் கொடுத்து விட்டுப்போ, இதெல்லாம் எனக்கு உபயோகமாக இருக்கும் என்று லிஸ்ட் போட்டுக்கொடுத்தான். உயிருள்ள ஜீவனை உணராமல் உயிரில்லாதப் பொருட்களைத் தேடிய அவனிடம் அத்தனையையும் பிடுங்கி, அவன் கண் முன்னாலேயே அனாதை இல்லத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன் என்று சொன்னாள். அவள் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனைக் கஷ்டங்களையும் காமெடிக் கதைகளைப் போல சொன்னாள். நான் ஒன்றும் சொல்ல்வில்லை..அவளை அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். எனக்கு மிகவும் நெருக்கமான இன்னொரு தோழி இவள்.
மூன்றாவது கதை
திருமணமாகி 9 வருடங்கள் முடிந்து, இரண்டு குழந்தைக்கும் தாயாகி விட்டாள். ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் வந்த ஒரு 8 வயது ஆண் பிள்ளைக்குத் தாயான விவகாரத்தான பெண் என் கணவனையும் அவளுடன் சேர்த்துக் கொண்டாள் . அவளும் என் கணவருடன் தான் வேலை செய்கிறாள் என்று சொன்னாள் என் தோழி. இன்று என் கணவர் அவளை விட்டு வர முடியாமல் இருக்கிறார். நம் குழந்தைகளுக்காக வாருங்கள் என்று கூப்பிட்டாலும் முடியவில்லை. என்னை விட்டு விலகிப் போனதற்கு அவர் சொல்லும் காரணம், என் அம்மாவைப் பார்த்துக் கொள்ளவில்லை.. என்னையும் நீ சரியாக கவனிக்கவில்லை.. அவள் என்னை அன்பாக பார்த்துக் கொள்கிறாள்..நம் குழந்தைகளைப் பிரிவது எனக்கு கஷ்டம் தான். ஆனால் அந்தக் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வேன் என்று சொன்னதாகச் சொன்னாள் என் தோழி. இன்று இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறாள்.
இந்த மூன்று திருமணங்களும் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான். மூன்று பெண்களும் பெற்றோர்கள் சரியாக விசாரிக்கவில்லை என்று சொன்னார்கள். பெற்றவர்கள், "பார்க்கும்போது அவன் நல்லவனாகத்தான் தெரிந்தான். ஆனால் அவன் மனதுக்குள் எப்படி இருக்கிறான் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார்கள்.
அவர்கள் சொல்வது ஓரளவிற்கு உண்மைதான் என்றாலும் தங்கள் பிள்ளைகளுக்கு முதல் திருமணமாக அல்லாமல், அந்த திருமணம் முடிந்தோ, முறிந்தோ போனபின் நடக்கும் மறுமணமாக இருந்தால் ரொம்பவும் கவனமுடன் இருக்கிறார்கள். பார்த்து பார்த்து நாலாப்பக்கமும் விசாரிக்கிறார்கள். தாங்கள் பார்க்கும் பெண்ணோ/பையனோ ஜாதி, மத பேதமில்லாமல், பணத்திற்கு ஆசைப்படாமல், தங்கள் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்வார்களா? என்றெல்லாம் துருவித் துருவி விசாரித்து விட்டுத்தான் செய்கிறார்கள். இரண்டாவது திருமண பந்தத்தில் காட்டும் அக்கறை ஏன் முதல் திருமணத்தில் இருப்பதில்லை என்பதுதான் பெற்றவர்களிடம் நான் வைக்கும் கேள்வி.
குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் மனதை அழுத்தத்தான் செய்கிறது. நல்லப் பெண்களை ஆண்களுக்கு புரிந்து கொள்ளத் தெரியவில்லை, அன்பான ஆண்களை பெண்களால் அனுசரித்துப் போக முடியவில்லை.
அம்மாவிடம் உள்ள குறைகளைப் பொறுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மனைவியின் சின்னச் சின்னக் குறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பாவிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் அவரை அன்பான அப்பாவாக ஏற்றுக் கொள்ளும் பெண்களுக்கு தன் கணவருடைய குறைகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள், எத்தனைக் குழப்பங்கள், எத்தனை விதமான கோபங்கள், அந்த அடக்க முடியாதக் கோபத்தினால் வரும் வார்த்தைகள்.. அந்த வார்த்தைகள் மனதை ரணமாக்கி கிழிக்கும் போது மனது மரத்துப்போய் தற்கொலை வரை போய்விடுகிறது. இதில் பெரும்பாலும் சிக்கித் திணறுவது பெண்கள்.
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஆண்களும், பெண்களும் வேறுபட்டுத் தெரிகிறார்கள். அது எத்தனைக் கோபக்கார மனைவியாக இருந்தாலும் கணவனுக்கு ஒரு சிறு தலைவலி, காய்ச்சல் என்று வந்தால் அவர்கள் அந்தக் கோபத்தை மறந்து அவரை தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் எத்தனை மென்மையான ஆணாக இருந்தாலும் மனைவி மேல் உள்ள ஒரு சிறியக் கோபத்தால் அவள் விழுந்தே கிடந்தால் கூட என்ன என்று கேட்காமல் இருக்கிறார்கள். அதற்காக எல்லா ஆண்களும் கொடுமைக்காரர்கள் என்று சொல்லவில்லை. அன்பான கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் கோபம் வந்தால் கொஞ்சமாகவேனும் விட்டுக்கொடுத்துப் போக ஈகோ தடுக்கிறதே... ஏன்?
நம்மைப் போலவே அவனுக்கும் அல்லது அவளுக்கும் உடம்பும், மனதும் வலிக்கும் என்று ஆறறிவுள்ள மனித மனம் நினைத்துப் பார்த்தால் எத்தனைப் பிரச்சினைகளை இல்லாமல் செய்யலாம். அதிலும் குடும்பத்தில் உள்ளவர்கள் கடுமையான வார்த்தைகளை, அதாவது 'செத்துத் தொலை' என்பது போன்ற மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசாமல் இருந்தாலே போதும்.
மூன்று பெண்களின் கதையால் மனதில் ஏறிய பாரத்தை இறக்கி வைக்கத்தான் இந்தப் பதிவு.
இந்தப் பதிவைப் படிக்கும் ஆண்களும், பெண்களும் ஒரு நிமிடமாவது வீட்டிலுள்ள நல்ல மனங்களை நினைத்துப் பார்த்தால் அதுவே போதும்.
இவளுக்கு திருமணமாகி எட்டு வருடங்களாக குழந்தை இல்லாதக் காரணத்தால் குடும்பத்தில் பிரச்சினை. யாரிடம் என்ன குறை? அதை தீர்ப்பதற்கு என்ன வழி என்ற சிந்தனையெல்லாம் இல்லை. அதனால் பிரச்சினை முத்திப்போனதில் அவள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டாள். தற்கொலை செய்யும் அளவுக்கு மனதைக் காயப்படுத்திய வார்த்தைகள் என்ன என்பது எங்கள் யாருக்கும் இன்னும் விடை தெரியாத கேள்வி? இத்தனைக்கும் அவள் மிகவும் பொறுமைசாலி. எங்களுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்து, ஒரே ரூமில் கிண்டல் பேசி, விளையாடி, சிரித்து மகிழ்ந்த எங்கள் தோழி இன்று உயிருடன் இல்லை. எங்கள் நட்பு வட்டத்தில் முதலில் திருமணம் செய்தவளும் இவள்தான். குடும்பத்தில் அவளுக்கு நிறைய மனக்கசப்புகள் இருந்ததாக மற்றத் தோழிகள் சொன்னார்கள். அவள் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல.. அவள் கணவனே அவளைக் கொலை செய்திருப்பான் என்று அனைவரும் சொன்னார்கள். என்னால் அப்படி யூகிக்க முடியவில்லை. இழப்பு இரண்டு பக்கமும்தான். மனம் விட்டு பேச முடியாமல் இருந்தாளா? பேசியும் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழி தெரியாமல் மனதிற்குள்ளேயே குழம்பிக் கொண்டிருந்தாளா? தெரியவில்லை. ஆனால் கல்லூரி படிக்கும் வயதில் எத்தனையோ கனவுகளுடன் சிரித்து விளையாடிய தோழி இன்று இல்லையே...
இரண்டாவது கதை
ஆயிரம் கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் திருமணம் செய்து கொண்டவள் திருமணமாகிய மூன்றே மாதத்தில் வரதட்சணை என்ற பெயரில் கஷ்டத்தை அனுபவித்தாள். அதுவும் மாமனார், மாமியாரால் அல்ல.. தன் கணவனாலேயே அந்தக் கஷ்டத்தை அனுபவித்த போது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
தன் மனைவியின் அண்ணங்கள் இருவருக்கும் சொந்த வீடு இருந்ததைப்போல, தனக்கும் ஒரு வீடு கொடுப்பார்கள் என்று கனவுக்கோட்டை கட்டிக்கொண்டு வந்த மாப்பிள்ளை அது இல்லாமல் போகவே அவளை கொஞ்சம், கொஞ்சமாக டார்ச்சர் செய்ய, தாங்க முடியாமல் திருமணமாகிய ஒன்பதே மாதத்தில் விவகாரத்தாகி விட்ட்து. அத்தனைக் கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டுதான் இருந்தேன். அவனுடன் வாழத்தான் ஆசைப்பட்டேன். அவன் கொடுத்தக் கஷ்டத்தைத் தாங்க முடியாமல் அம்மா வீட்டுக்கு ஓடிப்போய் ஏதாவது வாங்கி வருவேன் என்று நினைத்திருந்தான். ஆனால் நான் அதையெல்லாம் வெளியில் காட்டிக்கொள்ளாமல் அவனுக்கு பேலன்ஸாக இருந்ததால் அவனால் பொறுக்க முடியவில்லை. கடைசி வரை என்னுடன் வாழவே வாய்ப்புக் கொடுத்தேன். ஆனால் அந்த வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ள அவனுக்குத் தெரியவில்லை.
கோர்ட்டில் கூட நான் கொண்டு வந்த அத்தனை சீர் வரிசையையும் கொடுத்து விட்டுப்போ, இதெல்லாம் எனக்கு உபயோகமாக இருக்கும் என்று லிஸ்ட் போட்டுக்கொடுத்தான். உயிருள்ள ஜீவனை உணராமல் உயிரில்லாதப் பொருட்களைத் தேடிய அவனிடம் அத்தனையையும் பிடுங்கி, அவன் கண் முன்னாலேயே அனாதை இல்லத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன் என்று சொன்னாள். அவள் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனைக் கஷ்டங்களையும் காமெடிக் கதைகளைப் போல சொன்னாள். நான் ஒன்றும் சொல்ல்வில்லை..அவளை அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தேன். எனக்கு மிகவும் நெருக்கமான இன்னொரு தோழி இவள்.
மூன்றாவது கதை
திருமணமாகி 9 வருடங்கள் முடிந்து, இரண்டு குழந்தைக்கும் தாயாகி விட்டாள். ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் வந்த ஒரு 8 வயது ஆண் பிள்ளைக்குத் தாயான விவகாரத்தான பெண் என் கணவனையும் அவளுடன் சேர்த்துக் கொண்டாள் . அவளும் என் கணவருடன் தான் வேலை செய்கிறாள் என்று சொன்னாள் என் தோழி. இன்று என் கணவர் அவளை விட்டு வர முடியாமல் இருக்கிறார். நம் குழந்தைகளுக்காக வாருங்கள் என்று கூப்பிட்டாலும் முடியவில்லை. என்னை விட்டு விலகிப் போனதற்கு அவர் சொல்லும் காரணம், என் அம்மாவைப் பார்த்துக் கொள்ளவில்லை.. என்னையும் நீ சரியாக கவனிக்கவில்லை.. அவள் என்னை அன்பாக பார்த்துக் கொள்கிறாள்..நம் குழந்தைகளைப் பிரிவது எனக்கு கஷ்டம் தான். ஆனால் அந்தக் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வேன் என்று சொன்னதாகச் சொன்னாள் என் தோழி. இன்று இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறாள்.
இந்த மூன்று திருமணங்களும் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் தான். மூன்று பெண்களும் பெற்றோர்கள் சரியாக விசாரிக்கவில்லை என்று சொன்னார்கள். பெற்றவர்கள், "பார்க்கும்போது அவன் நல்லவனாகத்தான் தெரிந்தான். ஆனால் அவன் மனதுக்குள் எப்படி இருக்கிறான் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்?" என்றார்கள்.
அவர்கள் சொல்வது ஓரளவிற்கு உண்மைதான் என்றாலும் தங்கள் பிள்ளைகளுக்கு முதல் திருமணமாக அல்லாமல், அந்த திருமணம் முடிந்தோ, முறிந்தோ போனபின் நடக்கும் மறுமணமாக இருந்தால் ரொம்பவும் கவனமுடன் இருக்கிறார்கள். பார்த்து பார்த்து நாலாப்பக்கமும் விசாரிக்கிறார்கள். தாங்கள் பார்க்கும் பெண்ணோ/பையனோ ஜாதி, மத பேதமில்லாமல், பணத்திற்கு ஆசைப்படாமல், தங்கள் பிள்ளைகளை நன்றாக பார்த்துக் கொள்வார்களா? என்றெல்லாம் துருவித் துருவி விசாரித்து விட்டுத்தான் செய்கிறார்கள். இரண்டாவது திருமண பந்தத்தில் காட்டும் அக்கறை ஏன் முதல் திருமணத்தில் இருப்பதில்லை என்பதுதான் பெற்றவர்களிடம் நான் வைக்கும் கேள்வி.
குடும்பத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் மனதை அழுத்தத்தான் செய்கிறது. நல்லப் பெண்களை ஆண்களுக்கு புரிந்து கொள்ளத் தெரியவில்லை, அன்பான ஆண்களை பெண்களால் அனுசரித்துப் போக முடியவில்லை.
அம்மாவிடம் உள்ள குறைகளைப் பொறுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மனைவியின் சின்னச் சின்னக் குறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பாவிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் அவரை அன்பான அப்பாவாக ஏற்றுக் கொள்ளும் பெண்களுக்கு தன் கணவருடைய குறைகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள், எத்தனைக் குழப்பங்கள், எத்தனை விதமான கோபங்கள், அந்த அடக்க முடியாதக் கோபத்தினால் வரும் வார்த்தைகள்.. அந்த வார்த்தைகள் மனதை ரணமாக்கி கிழிக்கும் போது மனது மரத்துப்போய் தற்கொலை வரை போய்விடுகிறது. இதில் பெரும்பாலும் சிக்கித் திணறுவது பெண்கள்.
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் ஆண்களும், பெண்களும் வேறுபட்டுத் தெரிகிறார்கள். அது எத்தனைக் கோபக்கார மனைவியாக இருந்தாலும் கணவனுக்கு ஒரு சிறு தலைவலி, காய்ச்சல் என்று வந்தால் அவர்கள் அந்தக் கோபத்தை மறந்து அவரை தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் எத்தனை மென்மையான ஆணாக இருந்தாலும் மனைவி மேல் உள்ள ஒரு சிறியக் கோபத்தால் அவள் விழுந்தே கிடந்தால் கூட என்ன என்று கேட்காமல் இருக்கிறார்கள். அதற்காக எல்லா ஆண்களும் கொடுமைக்காரர்கள் என்று சொல்லவில்லை. அன்பான கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் கோபம் வந்தால் கொஞ்சமாகவேனும் விட்டுக்கொடுத்துப் போக ஈகோ தடுக்கிறதே... ஏன்?
நம்மைப் போலவே அவனுக்கும் அல்லது அவளுக்கும் உடம்பும், மனதும் வலிக்கும் என்று ஆறறிவுள்ள மனித மனம் நினைத்துப் பார்த்தால் எத்தனைப் பிரச்சினைகளை இல்லாமல் செய்யலாம். அதிலும் குடும்பத்தில் உள்ளவர்கள் கடுமையான வார்த்தைகளை, அதாவது 'செத்துத் தொலை' என்பது போன்ற மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசாமல் இருந்தாலே போதும்.
மூன்று பெண்களின் கதையால் மனதில் ஏறிய பாரத்தை இறக்கி வைக்கத்தான் இந்தப் பதிவு.
இந்தப் பதிவைப் படிக்கும் ஆண்களும், பெண்களும் ஒரு நிமிடமாவது வீட்டிலுள்ள நல்ல மனங்களை நினைத்துப் பார்த்தால் அதுவே போதும்.
Thursday, 23 September 2010
ச்சும்மா!!
அடுத்தக் குழந்தை எப்போ என்று அனைவரும் கேட்பதாகச் சொன்ன என் அருமை கணவனே!
இன்னுமா உனக்குப் புரியவில்லை?
நம் பிள்ளையோடு உன்னையும் சேர்த்து வளர்க்கிறேன் என்று
இன்னுமா உனக்குப் புரியவில்லை?
நம் பிள்ளையோடு உன்னையும் சேர்த்து வளர்க்கிறேன் என்று
Wednesday, 22 September 2010
சைக்கிள்!
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அவன் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். தினமும் ஒருமணி நேரம் சைக்கிள் ஓட்டிப் பழகிப் பார்க்கும்போது அவன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பான்.
சைக்கிளை அரைகுறையாக ஓட்டும்போதெல்லாம் தட்டுத்தடுமாறி விழுந்துகொண்டே இருந்தேன். நான் விழுவதைப் பார்த்த அவன் கிண்டலாகச் சிரித்தான். சே...திமிர்பிடித்தவன்! மனதில் நினைத்துக்கொண்டு அதற்கு மேல் சைக்கிளை ஓட்ட விருப்பமில்லாமல் போய்விடுவேன்.
ஸ்கூல் பஸ்ஸைப் பிடிக்க ஓடிவரும் போதும் இரண்டு முறை தொப்பென்று விழுந்திருக்கிறேன், அதுவும் அவன் முன்னாலேயே. "சைக்கிள் தான் வீக்-ன்னு நெனைச்சா காலுமா வீக்" நண்பர்களிடம் கேட்டுக்கொண்டு சிரித்தான். எல்லாம் நேரம்! எப்பப் பார்த்தாலும் இவன் முன்னாலேயே விழுந்து தொலைக்கிறோமே.. திமிர்பிடித்தவன் எப்படி சிரிக்கிறான்? நினைக்கும்போது எரிச்சலாக இருந்தது.
ஒருநாள் ஸ்கூல் லீவில் இருக்கும்போது ப்ரெண்ட் வீட்டுக்குப் போவதற்காக அரைகுறையாக ஓட்டத்தெரிந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். ஓட்டும்போது சைக்கிள் நேராகப்போகாமல் கொஞ்சம் கோணலாகப்போனது. எதிலாவது இடித்துவிடுவேனோ என்று நினைக்கும் நேரத்தில் சைக்கிளை விட்டு இறங்கி விடுவேன். அப்படியே கொஞ்ச தூரம் சைக்கிளைப் பிடித்து உருட்டிக்கொண்டே போவேன். அப்புறம் அதில் ஏறி உட்கார்ந்தால் கொஞ்சம் சுமாராக, நேராக ஓட்ட முடிந்தது.
அப்பாடா! ஒருவழியாக ஓட்ட முடிந்ததே.. இனி கொஞ்சம் நிம்மதியாக, மெதுவாகப் போகலாம்....
சைக்கிளில் மெதுவாகப் போய்க்கொண்டிருக்கும்போது, எதிரில் சைக்கிளில் ...யாரது? ஆ.. அவனேதான்! அந்தத் திமிர்பிடித்தவன் இங்கேயும் வந்துவிட்டானா? இப்போது நேராகப் போய்க்கொண்டிருந்த சைக்கிள் கொஞ்சம் அலம்பல் செய்தது. கவனமாக ஓட்ட வேண்டும். இவன் முன்னால் விழுந்து விடக்கூடாது..நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் சைக்கிள் மேல் மோதியே விட்டான். சைக்கிளோடு விழுந்தேன். பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தார்கள். அதில் ஒரு அம்மா என்னைத் தூக்கிவிட்டு, "பாப்பா, பாத்துப்போம்மா..." என்றார். உடனே அந்தம்மாவின் அருகில் இருந்தப் பெரியவர், "ஏம்ப்பா.. பொம்பளப்புள்ள அப்படி இப்படி வந்தாலும் நீ பார்த்துப் போகமாட்டியா? என்னப் புள்ள நீ" என்று அவனைப் பார்த்துக்கேட்டார்.
கையைக் காலை உதறிக்கொண்டு மறுபடியும் சைக்கிளில் ஏறும்போது, "ஏய்.. நில்லு.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று சொன்னான் அவன். நான் அவன் பேச்சைக் காதில் வாங்கவேயில்லை. பெரிய இவன்! தள்ளிவிட்டுட்டு பேசணுமாம்... ஒருமுறை முறைத்துவிட்டு சைக்கிளில் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டி ஓட்ட ஆரம்பித்தேன்.
சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் எப்படித்தான் மோப்பம் பிடித்து வந்துவிடுகிறானோ. ஒருவழியாத் தொலைஞ்சான். என்று மனதில் நினைத்துக்கொண்டு சைக்கிளை நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். அவன் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். அவ்வளவுதான்! சைக்கிளை நன்றாக அழுத்தி, வேகமாக ஓட்டினேன். அவ்னும் வேகமாக வந்தான். விடுவேனா? என்ன ஆனாலும் சரி! இப்போதைக்கு சைக்கிளை விட்டு இறங்கக்கூடாது, ஒருமுடிவுடன் வேகமாக ஓட்ட ஆரம்பித்தேன். சைக்கிளை இப்போது லாவகமாகப் பிடித்து பேலன்ஸ் செய்ய முடிந்தது.
ஓட்டினேன்...ஓட்டினேன்... வேகமாக ஓட்டிக் கொண்டேயிருந்தேன். குவார்ட்டஸ் என்பதால் ஒவ்வொரு ப்ளாக்குக்கு உள்ளேயும் நுழைஞ்சு, நுழைஞ்சு ஓட்டிக்கிட்டே இருந்தேன். எந்தப்பக்கம் போனாலும் அவனும் பின்னாலேயே வந்துக்கிட்டிருந்தான். விடமாட்டான் போலிருக்கே.. சைக்கிளை ரொம்பவும் வேகமாக ஓட்டி சந்து, பொந்துக்குள் எல்லாம் நுழைஞ்சு ஒருவழியா என் ப்ரெண்ட் வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டேன். அவள் வீட்டில் ரொம்ப நேரம் இருந்துவிட்டுத்தான் திரும்பினேன்.
திரும்பி வரும்போது, சைக்கிளை ரொம்பவும் அழகாக, வேகமாக ஓட்ட முடிந்தது. நம்மால் இவ்வளவு வேகமாக சைக்கிள் ஓட்டமுடிகிறதே என்று முதன்முதலாக மனதில் இனம்புரியாத சந்தோஷம்!
அடுத்தடுத்த நாட்களில் நான் விழாமல் சைக்கிள் ஓட்டியதை அவனும் ஆச்சரியத்துடன் பார்த்தான்.
இப்படித்தான் ஓட்டக் கற்றுக்கொண்டேன் சைக்கிளை.
சைக்கிளை அரைகுறையாக ஓட்டும்போதெல்லாம் தட்டுத்தடுமாறி விழுந்துகொண்டே இருந்தேன். நான் விழுவதைப் பார்த்த அவன் கிண்டலாகச் சிரித்தான். சே...திமிர்பிடித்தவன்! மனதில் நினைத்துக்கொண்டு அதற்கு மேல் சைக்கிளை ஓட்ட விருப்பமில்லாமல் போய்விடுவேன்.
ஸ்கூல் பஸ்ஸைப் பிடிக்க ஓடிவரும் போதும் இரண்டு முறை தொப்பென்று விழுந்திருக்கிறேன், அதுவும் அவன் முன்னாலேயே. "சைக்கிள் தான் வீக்-ன்னு நெனைச்சா காலுமா வீக்" நண்பர்களிடம் கேட்டுக்கொண்டு சிரித்தான். எல்லாம் நேரம்! எப்பப் பார்த்தாலும் இவன் முன்னாலேயே விழுந்து தொலைக்கிறோமே.. திமிர்பிடித்தவன் எப்படி சிரிக்கிறான்? நினைக்கும்போது எரிச்சலாக இருந்தது.
ஒருநாள் ஸ்கூல் லீவில் இருக்கும்போது ப்ரெண்ட் வீட்டுக்குப் போவதற்காக அரைகுறையாக ஓட்டத்தெரிந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். ஓட்டும்போது சைக்கிள் நேராகப்போகாமல் கொஞ்சம் கோணலாகப்போனது. எதிலாவது இடித்துவிடுவேனோ என்று நினைக்கும் நேரத்தில் சைக்கிளை விட்டு இறங்கி விடுவேன். அப்படியே கொஞ்ச தூரம் சைக்கிளைப் பிடித்து உருட்டிக்கொண்டே போவேன். அப்புறம் அதில் ஏறி உட்கார்ந்தால் கொஞ்சம் சுமாராக, நேராக ஓட்ட முடிந்தது.
அப்பாடா! ஒருவழியாக ஓட்ட முடிந்ததே.. இனி கொஞ்சம் நிம்மதியாக, மெதுவாகப் போகலாம்....
சைக்கிளில் மெதுவாகப் போய்க்கொண்டிருக்கும்போது, எதிரில் சைக்கிளில் ...யாரது? ஆ.. அவனேதான்! அந்தத் திமிர்பிடித்தவன் இங்கேயும் வந்துவிட்டானா? இப்போது நேராகப் போய்க்கொண்டிருந்த சைக்கிள் கொஞ்சம் அலம்பல் செய்தது. கவனமாக ஓட்ட வேண்டும். இவன் முன்னால் விழுந்து விடக்கூடாது..நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் சைக்கிள் மேல் மோதியே விட்டான். சைக்கிளோடு விழுந்தேன். பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தார்கள். அதில் ஒரு அம்மா என்னைத் தூக்கிவிட்டு, "பாப்பா, பாத்துப்போம்மா..." என்றார். உடனே அந்தம்மாவின் அருகில் இருந்தப் பெரியவர், "ஏம்ப்பா.. பொம்பளப்புள்ள அப்படி இப்படி வந்தாலும் நீ பார்த்துப் போகமாட்டியா? என்னப் புள்ள நீ" என்று அவனைப் பார்த்துக்கேட்டார்.
கையைக் காலை உதறிக்கொண்டு மறுபடியும் சைக்கிளில் ஏறும்போது, "ஏய்.. நில்லு.. உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று சொன்னான் அவன். நான் அவன் பேச்சைக் காதில் வாங்கவேயில்லை. பெரிய இவன்! தள்ளிவிட்டுட்டு பேசணுமாம்... ஒருமுறை முறைத்துவிட்டு சைக்கிளில் கொஞ்சமாக வேகத்தைக் கூட்டி ஓட்ட ஆரம்பித்தேன்.
சைக்கிள் ஓட்டும்போதெல்லாம் எப்படித்தான் மோப்பம் பிடித்து வந்துவிடுகிறானோ. ஒருவழியாத் தொலைஞ்சான். என்று மனதில் நினைத்துக்கொண்டு சைக்கிளை நிறுத்தி திரும்பிப் பார்த்தேன். அவன் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். அவ்வளவுதான்! சைக்கிளை நன்றாக அழுத்தி, வேகமாக ஓட்டினேன். அவ்னும் வேகமாக வந்தான். விடுவேனா? என்ன ஆனாலும் சரி! இப்போதைக்கு சைக்கிளை விட்டு இறங்கக்கூடாது, ஒருமுடிவுடன் வேகமாக ஓட்ட ஆரம்பித்தேன். சைக்கிளை இப்போது லாவகமாகப் பிடித்து பேலன்ஸ் செய்ய முடிந்தது.
ஓட்டினேன்...ஓட்டினேன்... வேகமாக ஓட்டிக் கொண்டேயிருந்தேன். குவார்ட்டஸ் என்பதால் ஒவ்வொரு ப்ளாக்குக்கு உள்ளேயும் நுழைஞ்சு, நுழைஞ்சு ஓட்டிக்கிட்டே இருந்தேன். எந்தப்பக்கம் போனாலும் அவனும் பின்னாலேயே வந்துக்கிட்டிருந்தான். விடமாட்டான் போலிருக்கே.. சைக்கிளை ரொம்பவும் வேகமாக ஓட்டி சந்து, பொந்துக்குள் எல்லாம் நுழைஞ்சு ஒருவழியா என் ப்ரெண்ட் வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டேன். அவள் வீட்டில் ரொம்ப நேரம் இருந்துவிட்டுத்தான் திரும்பினேன்.
திரும்பி வரும்போது, சைக்கிளை ரொம்பவும் அழகாக, வேகமாக ஓட்ட முடிந்தது. நம்மால் இவ்வளவு வேகமாக சைக்கிள் ஓட்டமுடிகிறதே என்று முதன்முதலாக மனதில் இனம்புரியாத சந்தோஷம்!
அடுத்தடுத்த நாட்களில் நான் விழாமல் சைக்கிள் ஓட்டியதை அவனும் ஆச்சரியத்துடன் பார்த்தான்.
இப்படித்தான் ஓட்டக் கற்றுக்கொண்டேன் சைக்கிளை.
Friday, 17 September 2010
ஆண்டு விழா அனுபவங்கள் - தொடர் பதிவு
பதிவர் தீபா ஆண்டுவிழா அனுபவங்கள் பற்றியத் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். எழுத வேண்டும் எழுத வேண்டும் என்று நினைத்தே மிகப் பெரிய இடைவெளி விட்டுவிட்டேன். அவரது அழைப்பை ஏற்று என்னுடையப் பள்ளிக்கால நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். டான்ஸ் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்பட்டதுண்டு. ஊர், ஊராக மாறிக்கொண்டே இருந்ததால் நடனம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமையவேயில்லை.
நான் அப்போது சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு மேடைக்கூச்சம் அதிகம் என்பதால் நானாக எந்த டான்ஸிலும் பேர் கொடுத்ததில்லை. அவர்களாகவே ஐந்தாறு பெயர்களை எழுதிக் கொண்டு போய் விடுவார்கள். முதலில் ரெண்டு, மூணு ஸ்டெப் சொல்லிக் கொடுப்பார்கள். ஓரளவிற்கு பிக்கப் செய்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். நான் சூப்பராக ஆடும் அளவுக்கு பெரிய நடனப்புயல் இல்லை என்றாலும் சொல்லிக் கொடுத்தால் அதைப் புரிந்து கொண்டு ஓரளவிற்கு ஆடி விடுவேன்.
இப்படி சுதந்திர தின விழா, குடியரசு தின விழா மற்றும் எல்லாப் பள்ளிகளுக்கும் நடக்கும் போட்டி என்று ஒவ்வொரு விழாவிற்கும் ஆடும் நடனம் இருக்கிறதே.. ஆஹா! அதை இப்போது நினைத்தாலும் பசுமையான நினைவுகள்தான்.
இந்த சுதந்திர, குடியரசு தின விழாக்களுக்காக கலெக்டர் ஆபீஸில் போய் ஆட வேண்டும் என்பதால் ரிகர்சல் அடிக்கடி நடக்கும். அதனால் க்ளாஸும் அடிக்கடி கட்டாகும். க்ளாஸைக் கட்டடிப்பதற்காகவே ரிகர்சல் என்ற பெயரில் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவோம். ஒரு மணிநேரம் பயிற்சி என்றால் இன்னும் ஒரு மணிநேரம் என்ன காஸ்ட்யூம், மேக்கப் போடலாம் என்ற டிஸ்கஷனிலேயே ஓடிவிடும். அப்படி அனைவரும் பாராட்டிய டான்ஸ் என்று சொன்னால் அது, "மேக வீதியில் நூறு வெண்ணிலா" (வெற்றிக்கரங்கள் என்னும் படத்திலிருந்து) ஒயிட் அண்ட் ஒயிட் ட்ரெஸ்ஸில் சிவப்புக் கலர் ரிப்பன் வைத்து ஆடியதுதான்.
அதற்கு மேல் கரகாட்டம், ஒயிலாட்டம் என்று வேறு வேறு விழாக்களில் ஆடியதுண்டு. ஆண்டு விழாவில் "ஏக்..தோ...தீன்" பாடலுக்கு நாலு பேர் ஆடினோம். இப்படி மறக்க முடியாத வேறு வேறு நடனங்கள் எல்லாம் 5-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரைதான்.
என்னால் மறக்கவே முடியாத டான்ஸ் என்று சொன்னால் நான் 7 வது படிக்கும்போது, முதலும் கடைசியுமாக ஆடிய ஸோலோ டான்ஸ்தான்.
பள்ளியில் நடந்த ஏதோ ஒரு விழாவிற்காக என் வகுப்பு ஆசிரியர், விழாவிற்கு ஒரு நாள்தான் உள்ளது என்ற நிலையில் என்னிடம் ஏதாவது ஒரு டான்ஸ் பண்ணு என்று கண்டிப்பாக கூறிவிட்டார். தனியாக ஆட கூச்சம் என்பதால் தயக்கத்துடன் வேண்டாம் என்று மறுத்துப்பார்த்தேன். முடியவில்லை. "நான் என் க்ளாஸிலிருந்து ப்ரோகிராம் கொடுக்கிறேன் என்று ப்ரின்ஸிபாலிடம் சொல்லியிருக்கேன். அதனால் கண்டிப்பாக ஆடியே தீர வேண்டும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். என்ன செய்வதென்று புரியாமல் நின்றபோது தோழிகள் பக்திப்பாடலுக்கு ஆடினால் ஈஸியாக இருக்கும் என்று ஐடியா கொடுத்தார்கள். வேறு வழியில்லாமல் என்னால் முடிந்தளவு ப்ராக்டீஸ் செய்துவந்தேன்.
பக்திப்பாடல் என்பதால் பட்டுப்பாவாடை போட்டு, தலையை விரித்துவிட்டு, நெற்றியில் குங்குமப்பொட்டும் வைத்துக்கொண்டு, காலில் பெரியக் கொலுசு, இடுப்பில் ஒட்டியாணம் என்று ஃபுல் கெட்டப்பில் விழாவிற்கு வந்தேன். நன்றாக ஆடுகிறேனா என்பத சரிபார்க்க தோழிகள் முன்னாடி ஆடிக்காட்டினேன். நல்லா இருக்கு, ஆனா ஏதோ ஒண்ணுக் குறையுதுன்னு சொல்லி, பள்ளியில் உள்ள வேப்பமரத்திலிருந்து வேப்பிலைகளைக் கொத்தாகப் பறித்துக்கொண்டு வந்து என் கையில் திணித்தார்கள். வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் அப்போதுதான் இந்தக் கெட்டப்பிற்கு ஃபுல் ஃபார்மில் ஆட முடியும் என்று உசுப்பேற்றி விட்டார்கள். வேறு வழியில்லாமல் "ஆயி...மகமாயி..அவள் தாய்க்கெல்லாம் தாயான தாயி.." என்று கையில் வேப்பிலைகளை வைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்தேன். தனியாக ஆடவிட்டு விட்டார்களே என்று கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் ஆடிவிட்டேன். தோழிகள் அனைவரும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.
அவர்கள் சிரித்ததற்கானக் காரணம் ஆடிமுடித்தவுடன் தான் தெரிந்தது. நான் ஆக்ரோஷமாக ஆடியதைப்பார்த்து பக்தி முத்திப்போன ஆசிரியர்கள் சிலர் நான் சாமி வந்துதான் ஆடுகிறேன் என்று நினைத்து கன்னத்தில் போட்டுக்கொண்டார்களாம். இதைக் கேட்டவுடன் என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதிலிருந்து தனியாக ஆடினால் நானாக ஸ்டெப் போட்டு பழக வேண்டும் என்பதால் அதற்கு பிறகு நான் ஸோலோவாக ஆடியதே இல்லை.
அதன் பின்பு வேறு ஊரில் வேறு பள்ளியில் படிக்க நேர்ந்தது. அங்கு சிறு வயதிலிருந்து அதேப் பள்ளியில் படித்த மாணவிகளின் ஆதிக்கம் நிறைய இருந்ததால் நானாக எதிலும் கலந்து கொள்ளவில்லை. கல்லூரியில் படித்தக் காலத்தில் ஒன்றிரண்டு நடனங்கள் ஆடியதுண்டு. அப்போது மேடையில் ஆடியதைவிட தோழிகளுடன் சேர்ந்து ஒரு ஆடியன்ஸாக மேடைக்குக் கீழே ஆடி ஜாலியாக இருந்ததுண்டு. அதெல்லாம் சந்தோஷமான நாட்கள்.
இன்றும் குழந்தைகள் ஆடுவதைப் பார்த்தால் அவர்களுடன் சேர்ந்து ஆடவேண்டும் என்று கால் பரபரக்கும். ஆனாலும் ஏதோ ஒரு கூச்சத்தில் அமைதியாக அவர்களை ரசிக்க மட்டும்தான் முடிகிறது. இப்போது எல்.கே.ஜி படிக்கும் என் மகளின் பள்ளி ஆண்டுவிழாவுக்காகத்தான் காத்திருக்கிறேன்.
பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே ஆசைப்பட்டதுண்டு. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையாமலேப் போனது எனக்கு இப்போதும் மிகப்பெரிய வருத்தம்.
இந்த ஆண்டுவிழா அனுபவங்கள் தொடர்பதிவுக்கு என்னை அழைத்ததன் மூலம் தீபா, என் பள்ளி, கால நினைவுகளை மட்டும் தட்டியெழுப்பவில்லை, நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தையும்தான். நன்றி தீபா!
எனக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். டான்ஸ் முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்பட்டதுண்டு. ஊர், ஊராக மாறிக்கொண்டே இருந்ததால் நடனம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு அமையவேயில்லை.
நான் அப்போது சிவகங்கையில் உள்ள ஒரு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு மேடைக்கூச்சம் அதிகம் என்பதால் நானாக எந்த டான்ஸிலும் பேர் கொடுத்ததில்லை. அவர்களாகவே ஐந்தாறு பெயர்களை எழுதிக் கொண்டு போய் விடுவார்கள். முதலில் ரெண்டு, மூணு ஸ்டெப் சொல்லிக் கொடுப்பார்கள். ஓரளவிற்கு பிக்கப் செய்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். நான் சூப்பராக ஆடும் அளவுக்கு பெரிய நடனப்புயல் இல்லை என்றாலும் சொல்லிக் கொடுத்தால் அதைப் புரிந்து கொண்டு ஓரளவிற்கு ஆடி விடுவேன்.
இப்படி சுதந்திர தின விழா, குடியரசு தின விழா மற்றும் எல்லாப் பள்ளிகளுக்கும் நடக்கும் போட்டி என்று ஒவ்வொரு விழாவிற்கும் ஆடும் நடனம் இருக்கிறதே.. ஆஹா! அதை இப்போது நினைத்தாலும் பசுமையான நினைவுகள்தான்.
இந்த சுதந்திர, குடியரசு தின விழாக்களுக்காக கலெக்டர் ஆபீஸில் போய் ஆட வேண்டும் என்பதால் ரிகர்சல் அடிக்கடி நடக்கும். அதனால் க்ளாஸும் அடிக்கடி கட்டாகும். க்ளாஸைக் கட்டடிப்பதற்காகவே ரிகர்சல் என்ற பெயரில் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவோம். ஒரு மணிநேரம் பயிற்சி என்றால் இன்னும் ஒரு மணிநேரம் என்ன காஸ்ட்யூம், மேக்கப் போடலாம் என்ற டிஸ்கஷனிலேயே ஓடிவிடும். அப்படி அனைவரும் பாராட்டிய டான்ஸ் என்று சொன்னால் அது, "மேக வீதியில் நூறு வெண்ணிலா" (வெற்றிக்கரங்கள் என்னும் படத்திலிருந்து) ஒயிட் அண்ட் ஒயிட் ட்ரெஸ்ஸில் சிவப்புக் கலர் ரிப்பன் வைத்து ஆடியதுதான்.
அதற்கு மேல் கரகாட்டம், ஒயிலாட்டம் என்று வேறு வேறு விழாக்களில் ஆடியதுண்டு. ஆண்டு விழாவில் "ஏக்..தோ...தீன்" பாடலுக்கு நாலு பேர் ஆடினோம். இப்படி மறக்க முடியாத வேறு வேறு நடனங்கள் எல்லாம் 5-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பு வரைதான்.
என்னால் மறக்கவே முடியாத டான்ஸ் என்று சொன்னால் நான் 7 வது படிக்கும்போது, முதலும் கடைசியுமாக ஆடிய ஸோலோ டான்ஸ்தான்.
பள்ளியில் நடந்த ஏதோ ஒரு விழாவிற்காக என் வகுப்பு ஆசிரியர், விழாவிற்கு ஒரு நாள்தான் உள்ளது என்ற நிலையில் என்னிடம் ஏதாவது ஒரு டான்ஸ் பண்ணு என்று கண்டிப்பாக கூறிவிட்டார். தனியாக ஆட கூச்சம் என்பதால் தயக்கத்துடன் வேண்டாம் என்று மறுத்துப்பார்த்தேன். முடியவில்லை. "நான் என் க்ளாஸிலிருந்து ப்ரோகிராம் கொடுக்கிறேன் என்று ப்ரின்ஸிபாலிடம் சொல்லியிருக்கேன். அதனால் கண்டிப்பாக ஆடியே தீர வேண்டும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். என்ன செய்வதென்று புரியாமல் நின்றபோது தோழிகள் பக்திப்பாடலுக்கு ஆடினால் ஈஸியாக இருக்கும் என்று ஐடியா கொடுத்தார்கள். வேறு வழியில்லாமல் என்னால் முடிந்தளவு ப்ராக்டீஸ் செய்துவந்தேன்.
பக்திப்பாடல் என்பதால் பட்டுப்பாவாடை போட்டு, தலையை விரித்துவிட்டு, நெற்றியில் குங்குமப்பொட்டும் வைத்துக்கொண்டு, காலில் பெரியக் கொலுசு, இடுப்பில் ஒட்டியாணம் என்று ஃபுல் கெட்டப்பில் விழாவிற்கு வந்தேன். நன்றாக ஆடுகிறேனா என்பத சரிபார்க்க தோழிகள் முன்னாடி ஆடிக்காட்டினேன். நல்லா இருக்கு, ஆனா ஏதோ ஒண்ணுக் குறையுதுன்னு சொல்லி, பள்ளியில் உள்ள வேப்பமரத்திலிருந்து வேப்பிலைகளைக் கொத்தாகப் பறித்துக்கொண்டு வந்து என் கையில் திணித்தார்கள். வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் அப்போதுதான் இந்தக் கெட்டப்பிற்கு ஃபுல் ஃபார்மில் ஆட முடியும் என்று உசுப்பேற்றி விட்டார்கள். வேறு வழியில்லாமல் "ஆயி...மகமாயி..அவள் தாய்க்கெல்லாம் தாயான தாயி.." என்று கையில் வேப்பிலைகளை வைத்துக்கொண்டு ஆட ஆரம்பித்தேன். தனியாக ஆடவிட்டு விட்டார்களே என்று கொஞ்சம் ஆக்ரோஷமாகத்தான் ஆடிவிட்டேன். தோழிகள் அனைவரும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.
அவர்கள் சிரித்ததற்கானக் காரணம் ஆடிமுடித்தவுடன் தான் தெரிந்தது. நான் ஆக்ரோஷமாக ஆடியதைப்பார்த்து பக்தி முத்திப்போன ஆசிரியர்கள் சிலர் நான் சாமி வந்துதான் ஆடுகிறேன் என்று நினைத்து கன்னத்தில் போட்டுக்கொண்டார்களாம். இதைக் கேட்டவுடன் என்னாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதிலிருந்து தனியாக ஆடினால் நானாக ஸ்டெப் போட்டு பழக வேண்டும் என்பதால் அதற்கு பிறகு நான் ஸோலோவாக ஆடியதே இல்லை.
அதன் பின்பு வேறு ஊரில் வேறு பள்ளியில் படிக்க நேர்ந்தது. அங்கு சிறு வயதிலிருந்து அதேப் பள்ளியில் படித்த மாணவிகளின் ஆதிக்கம் நிறைய இருந்ததால் நானாக எதிலும் கலந்து கொள்ளவில்லை. கல்லூரியில் படித்தக் காலத்தில் ஒன்றிரண்டு நடனங்கள் ஆடியதுண்டு. அப்போது மேடையில் ஆடியதைவிட தோழிகளுடன் சேர்ந்து ஒரு ஆடியன்ஸாக மேடைக்குக் கீழே ஆடி ஜாலியாக இருந்ததுண்டு. அதெல்லாம் சந்தோஷமான நாட்கள்.
இன்றும் குழந்தைகள் ஆடுவதைப் பார்த்தால் அவர்களுடன் சேர்ந்து ஆடவேண்டும் என்று கால் பரபரக்கும். ஆனாலும் ஏதோ ஒரு கூச்சத்தில் அமைதியாக அவர்களை ரசிக்க மட்டும்தான் முடிகிறது. இப்போது எல்.கே.ஜி படிக்கும் என் மகளின் பள்ளி ஆண்டுவிழாவுக்காகத்தான் காத்திருக்கிறேன்.
பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே ஆசைப்பட்டதுண்டு. ஆனால் அதற்கான வாய்ப்புகள் அமையாமலேப் போனது எனக்கு இப்போதும் மிகப்பெரிய வருத்தம்.
இந்த ஆண்டுவிழா அனுபவங்கள் தொடர்பதிவுக்கு என்னை அழைத்ததன் மூலம் தீபா, என் பள்ளி, கால நினைவுகளை மட்டும் தட்டியெழுப்பவில்லை, நடனத்தின் மீதுள்ள ஆர்வத்தையும்தான். நன்றி தீபா!
Wednesday, 15 September 2010
ஸ்வர்ணலதாவின் நினைவாக....
பாடகி ஸ்வர்ணலதா மறைவு!
இந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. "மாலையில் யாரோ மனதோடு பேச.." என்று பாடிய அந்த வசீகரக் குரலில் மயங்காதவர்கள் யாராவது உண்டா?
ஸ்வர்ணலதாவின் குரலைக் கேட்பதற்கு முன்பு, உனக்கு மிகவும் பிடித்தப் பாடகர் யார்? என்று கேட்டால் உடனே நான் சொல்வது எஸ்.பிபியையும், சித்ராவையும் தான். அவர்கள் எனக்கு இன்னமும் பிடித்தப் பாடகர்களாக இருந்தாலும் ஸ்வர்ணலதாவின் பாடல்கள் பிடித்தது ஒரு தனிக்கதை.
அவர் பாடி எனக்குப் பிடித்த பாடல்கள்;
"என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட.." - உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்
"அன்புள்ள மன்னவனே ஆசைக் காதலனே.." - மேட்டுக்குடி
"கண்ணாடி சேல கட்டி.." - சார்லி சாப்ளின்
"மல்லிக மொட்டு மனசத் தொட்டு.." - ?
"ஊரடங்கும் சாமத்திலே..." - புதுப்பட்டி பொன்னுத்தாயி
"குயில் பாட்டு ஹோ.." - என் ராசாவின் மனசிலே
"ஆத்தோரம் தோப்புக்குள்ள..." - ?
"கானக்கருங்குயிலே கச்சேரிக்கு..." - பாண்டித்துரை
"காதலா காதலா..." - சூரிய வம்சம்
"மெல்லிசையே.. என் இதயத்தின்.." - மிஸ்டர் ரோமியோ
"காலையில் கேட்டது கோயில் மணி.." - செந்தமிழ்ப்பாட்டு
இன்னும் நிறைய. இந்தப் பாடல்களை எல்லாம் கேட்ட ஆரம்பத்தில் இதை ஸ்வர்ணலதாதான் பாடினார் என்று எனக்குத் தெரியாது. ஆஹா! இந்தப் பாடல் கேட்பதற்கு இவ்வளவு நன்றாக இருக்கிறதே, இதை யார் பாடியிருப்பார்கள் என்று தேடும்போது தான் தெரியும் அது ஸ்வர்ணலதா பாடியது என்று. அப்படித்தான் அவர் பாடல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது.
மனதில் நிற்காத படங்களில் கூட அவர் பாடிய பாடல்கள் மனதிற்கு இனிமையாக இருந்தது. இப்படி தன் குரலால் எத்தனை பேரை வசியப்படுத்தி இருப்பார்.
ஆனால் இன்று ...அவர் இல்லை என்பதை நினைக்கும் போது...
அதுவும் இந்த சின்ன வயதில், எவ்வளவோ சாதனைகள் செய்ய வேண்டிய வயதில் அல்ப ஆயுசில் மறைந்து போனது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு.
ஆழ்ந்த இரங்கல் என்றெல்லாம் ஒரு வார்த்தையில் முடிக்க முடியவில்லை. (அவர் இல்லை என்பதை நினைக்கும் போது).
இந்த செய்தியின் அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. "மாலையில் யாரோ மனதோடு பேச.." என்று பாடிய அந்த வசீகரக் குரலில் மயங்காதவர்கள் யாராவது உண்டா?
ஸ்வர்ணலதாவின் குரலைக் கேட்பதற்கு முன்பு, உனக்கு மிகவும் பிடித்தப் பாடகர் யார்? என்று கேட்டால் உடனே நான் சொல்வது எஸ்.பிபியையும், சித்ராவையும் தான். அவர்கள் எனக்கு இன்னமும் பிடித்தப் பாடகர்களாக இருந்தாலும் ஸ்வர்ணலதாவின் பாடல்கள் பிடித்தது ஒரு தனிக்கதை.
அவர் பாடி எனக்குப் பிடித்த பாடல்கள்;
"என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட.." - உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்
"அன்புள்ள மன்னவனே ஆசைக் காதலனே.." - மேட்டுக்குடி
"கண்ணாடி சேல கட்டி.." - சார்லி சாப்ளின்
"மல்லிக மொட்டு மனசத் தொட்டு.." - ?
"ஊரடங்கும் சாமத்திலே..." - புதுப்பட்டி பொன்னுத்தாயி
"குயில் பாட்டு ஹோ.." - என் ராசாவின் மனசிலே
"ஆத்தோரம் தோப்புக்குள்ள..." - ?
"கானக்கருங்குயிலே கச்சேரிக்கு..." - பாண்டித்துரை
"காதலா காதலா..." - சூரிய வம்சம்
"மெல்லிசையே.. என் இதயத்தின்.." - மிஸ்டர் ரோமியோ
"காலையில் கேட்டது கோயில் மணி.." - செந்தமிழ்ப்பாட்டு
இன்னும் நிறைய. இந்தப் பாடல்களை எல்லாம் கேட்ட ஆரம்பத்தில் இதை ஸ்வர்ணலதாதான் பாடினார் என்று எனக்குத் தெரியாது. ஆஹா! இந்தப் பாடல் கேட்பதற்கு இவ்வளவு நன்றாக இருக்கிறதே, இதை யார் பாடியிருப்பார்கள் என்று தேடும்போது தான் தெரியும் அது ஸ்வர்ணலதா பாடியது என்று. அப்படித்தான் அவர் பாடல்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்க ஆரம்பித்தது.
மனதில் நிற்காத படங்களில் கூட அவர் பாடிய பாடல்கள் மனதிற்கு இனிமையாக இருந்தது. இப்படி தன் குரலால் எத்தனை பேரை வசியப்படுத்தி இருப்பார்.
ஆனால் இன்று ...அவர் இல்லை என்பதை நினைக்கும் போது...
அதுவும் இந்த சின்ன வயதில், எவ்வளவோ சாதனைகள் செய்ய வேண்டிய வயதில் அல்ப ஆயுசில் மறைந்து போனது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு மிகப் பெரிய இழப்பு.
ஆழ்ந்த இரங்கல் என்றெல்லாம் ஒரு வார்த்தையில் முடிக்க முடியவில்லை. (அவர் இல்லை என்பதை நினைக்கும் போது).
Tuesday, 7 September 2010
ஆண், பெண் சுதந்திரம்
சமீபத்தில் 'நான் மகான் அல்ல' படம் பார்த்தேன். அதில் நிறையக் காட்சிகள் பார்ப்பதற்கு கொடூரமாகத் தெரிந்தாலும் அவை அனைத்தும் இன்று நாட்டில் நடக்கக்கூடியதாகத்தான் இருக்கின்றன. படத்தில் வில்லன்களாக வரும் கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற தவறுகள் செய்யும் ஆண் பிள்ளைகளை அப்படியே தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். நான் அந்தப் படத்தின் விமர்சனங்களுக்குள் செல்லாமல் விஷயத்துக்கு வருகிறேன்.
போதைக்கு அடிமையாகி, பெண்களைக் கற்பழித்து, கொலை செய்யும் அளவிற்கு மாணவர்கள் செல்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையானக் காரணம் பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம்தான்.
ஒரு வீட்டில் பெண்பிள்ளையை "இருட்டிய பிறகு ஏன் வெளியே செல்கிறாய்?" என்றுக் கட்டுப்படுத்தும் அதே அம்மாதான் ஆண்பிள்ளையை இரவு முழுவதும் வெளியே நண்பர்களுடன் தங்கிக் கொள்வதற்கும் அனுமதி கொடுக்கிறாள். ஏன் இந்த முரண்பாடு? அதனால் யாருக்கு என்ன பயன்?
ஆண்களைப் போல் பெண்கள் வெளியே சுதந்திரமாகத் திரிய வேண்டும் என்றில்லை. ஆனால் பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்தால் இந்த சமூகத்திற்கு நல்லது.
நட்பு வட்டம் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும் வரைப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை.
என் கணவர், அண்ணா, மாமா, சித்தப்பா, அப்பா என்று உறவினர்கள் அனைவரிடமும் இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றுக் கேட்டால் அனைவரும் ஒன்றாக சொன்னது "நண்பர்கள் பழக்கிவிட்டார்கள்" என்பதுதான்.
குடி, போதை என்று அடிமையாகி கிடப்பவர்கள் ஒன்றாகச் சேரும்போது குடிக்காத இன்னும் இரண்டு பேரைக் குடிக்க வைத்துக் கெடுக்கிறார்கள். போதைத் தலைக்கேறினால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது நினைவிலே இருப்பதுமில்லை. அதிலும் அந்தப் போதையில் ஊறிப்போன அனைவரும் சொல்லும் ஒரு மட்டமான டயலாக் "என்னோட லிமிட் எனக்குத் தெரியும்" என்பது.
இதற்கெல்லாம் காரணம் ஆண்களுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம். அந்த அளவுக்கு மீறிய சுதந்திரத்தால், தவறான நட்புகளுடன் சேர்ந்து தானும் கெட்டு, இன்னும் நாலு பேரை சேர்த்துக் கெடுக்கிறார்கள், பெண்கள் வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள். இதற்கு காரணமாக அம்மா என்னும் இன்னொரு பெண்ணேக் காரணமாக இருப்பது அதைவிட வேதனையிலும் வேதனை.
பெண்கள் தங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சின்னத் தவறு நடந்தால் கூட பயத்தில் உளறி விடுவார்கள். ஆனால் ஆண்கள் பெரிய தவறே என்றாலும் தன் நண்பனுக்காக என்று அனைத்தையும் மூடி மறைத்து விடுவார்கள். இது ஆரோக்கியமான விஷயமா?
ஆண்பிள்ளைகள் வைத்திருக்கும் இன்றையத் தலைமுறைப் பெற்றோரே! பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் கட்டுப்பாடுகளில் சிலவற்றை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுங்கள்!
போதைக்கு அடிமையாகி, பெண்களைக் கற்பழித்து, கொலை செய்யும் அளவிற்கு மாணவர்கள் செல்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு முழுமையானக் காரணம் பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம்தான்.
ஒரு வீட்டில் பெண்பிள்ளையை "இருட்டிய பிறகு ஏன் வெளியே செல்கிறாய்?" என்றுக் கட்டுப்படுத்தும் அதே அம்மாதான் ஆண்பிள்ளையை இரவு முழுவதும் வெளியே நண்பர்களுடன் தங்கிக் கொள்வதற்கும் அனுமதி கொடுக்கிறாள். ஏன் இந்த முரண்பாடு? அதனால் யாருக்கு என்ன பயன்?
ஆண்களைப் போல் பெண்கள் வெளியே சுதந்திரமாகத் திரிய வேண்டும் என்றில்லை. ஆனால் பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்தால் இந்த சமூகத்திற்கு நல்லது.
நட்பு வட்டம் பெற்றோர்களின் கண்காணிப்பில் இருக்கும் வரைப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் நண்பர்களுடன் வெளியே தங்குகிறேன் என்று ஒரு ஆண் சொன்னால் அது குடித்து கும்மாளம் போடுவதற்காகத்தானே தவிர வேறு எதற்காகவுமில்லை.
என் கணவர், அண்ணா, மாமா, சித்தப்பா, அப்பா என்று உறவினர்கள் அனைவரிடமும் இந்தப் பழக்கம் எப்படி வந்தது என்றுக் கேட்டால் அனைவரும் ஒன்றாக சொன்னது "நண்பர்கள் பழக்கிவிட்டார்கள்" என்பதுதான்.
குடி, போதை என்று அடிமையாகி கிடப்பவர்கள் ஒன்றாகச் சேரும்போது குடிக்காத இன்னும் இரண்டு பேரைக் குடிக்க வைத்துக் கெடுக்கிறார்கள். போதைத் தலைக்கேறினால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது நினைவிலே இருப்பதுமில்லை. அதிலும் அந்தப் போதையில் ஊறிப்போன அனைவரும் சொல்லும் ஒரு மட்டமான டயலாக் "என்னோட லிமிட் எனக்குத் தெரியும்" என்பது.
இதற்கெல்லாம் காரணம் ஆண்களுக்கு பெற்றோர்கள் கொடுக்கும் அளவுக்கு மீறிய சுதந்திரம். அந்த அளவுக்கு மீறிய சுதந்திரத்தால், தவறான நட்புகளுடன் சேர்ந்து தானும் கெட்டு, இன்னும் நாலு பேரை சேர்த்துக் கெடுக்கிறார்கள், பெண்கள் வாழ்க்கையையும் சீரழிக்கிறார்கள். இதற்கு காரணமாக அம்மா என்னும் இன்னொரு பெண்ணேக் காரணமாக இருப்பது அதைவிட வேதனையிலும் வேதனை.
பெண்கள் தங்கள் நட்பு வட்டத்தில் ஒரு சின்னத் தவறு நடந்தால் கூட பயத்தில் உளறி விடுவார்கள். ஆனால் ஆண்கள் பெரிய தவறே என்றாலும் தன் நண்பனுக்காக என்று அனைத்தையும் மூடி மறைத்து விடுவார்கள். இது ஆரோக்கியமான விஷயமா?
ஆண்பிள்ளைகள் வைத்திருக்கும் இன்றையத் தலைமுறைப் பெற்றோரே! பெண்பிள்ளைகளுக்குக் கொடுக்கும் கட்டுப்பாடுகளில் சிலவற்றை ஆண்பிள்ளைகளுக்கும் கொடுத்து அடுத்த தலைமுறையைக் காப்பாற்றுங்கள்!
Monday, 30 August 2010
கவனமுடன்....
ஒருநாள் நானும், எனது கணவரும் குழந்தைக்கு ரெயின் கோட் வாங்குவதற்காக கடைத்தெருவுக்குச் சென்றிருந்தோம். ரெயின் கோட் வாங்கிவிட்டு வெளியில் வந்தவுடன், கடைக்கு வெளியே ஸ்வீட் கார்ன், கலர் கலராக ஜூஸ் எல்லாம் வைத்திருப்பதைப் பார்த்தவுடன் எனக்குக் கலர் ஜூஸ் வேண்டும் என்று அழுது அடம்பிடித்தாள் என் குழந்தை. எவ்வளவு தான் சமாதானம் செய்தாலும் முடியவில்லை.
"எனக்குப் பசிக்குதும்மா, ப்ளீஸ்மா" என்று அவள் கெஞ்சியதைப் பார்த்தவுடன் பாவம் என்று இரக்கப்பட்டு வாங்கினேன். அவள் கையில் இன்னும் நான் கொடுக்கவில்லை. கையில் இருப்பதைப் பிடுங்கத்தான் பார்த்தாள்.
என் கணவர் சில்லறை மாற்றிக் கொண்டிருக்கும்போது, கையில் வைத்திருந்த ஜூஸை யதேச்சையாகப் பார்த்தேன். பார்க்கும் போதுதான் தெரிந்தது, அதன் எக்ஸ்பையரி டேட் முடிந்து ஒரு மாதம் ஆகிறது என்று. சரி, வேறு பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்றுப் பார்த்தால் வரிசையாக எல்லா பாட்டிலிலும் ஒரே டேட் தான் இருந்தது.
அதிர்ச்சியாக என் கணவரிடம் காட்டினேன். அவர் கடைக்காரனிடம் கேட்டதற்கு ஏதேதோ சொல்லி மழுப்பினான். என் கணவர் காசைத் திருப்பிக் கேட்டார். அதற்குள் என் குழந்தை வேறு ஒரு பாட்டிலை எடுத்துப் பிரித்து விட்டாள். அவள் பிரித்ததை வைத்துக் கடைக்காரன் பிரச்சினை செய்தான். என் கணவர் கோபமாக என் குழந்தைக் கையில் வைத்திருந்த பாட்டிலைப் பிடுங்கி கடைக்காரன் கண்முன்னேத் தூக்கி எறிந்து விட்டார்.
"இதெல்லாம் ஏன் குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கிறே?" என்று எனக்குத்தான் திட்டு விழுந்தது. அந்த இடத்தை விட்டுக் கிளம்பும் போது, அடுத்தடுத்து வந்தவர்கள் அந்த ஜூஸை வாங்கிக் கொண்டே இருந்தார்கள். யாருமே அந்தப் பாட்டிலைக் கவனிக்கவே இல்லை. என் கணவர் திட்டியது கூட எனக்கு கஷ்டமாக இல்லை. ஆனால் யாருமே இந்த மாதிரி விஷயங்களைக் கவனிக்காமல் இருந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
"இப்படி ஏமாத்துறாங்களே. நான் வேணுன்னா அவங்ககிட்ட சொல்லிட்டு வரவா?" கணவரிடம் கேட்டேன். அதற்கும் திட்டு விழுந்தது.
"அவனுக்கென்ன அக்கறை? வாங்கிக் குடிப்பவர்களுக்குத்தான் அறிவு வேண்டும்." என்று சொன்னார் என் கணவர்.
என்ன சொல்லணும்னு தெரியாமல் முழித்தேன்.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் அனைவரும் கவனமாக இருக்கத்தான் இதை எழுதுகிறேன். (முக்கியமாகக் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு)
"எனக்குப் பசிக்குதும்மா, ப்ளீஸ்மா" என்று அவள் கெஞ்சியதைப் பார்த்தவுடன் பாவம் என்று இரக்கப்பட்டு வாங்கினேன். அவள் கையில் இன்னும் நான் கொடுக்கவில்லை. கையில் இருப்பதைப் பிடுங்கத்தான் பார்த்தாள்.
என் கணவர் சில்லறை மாற்றிக் கொண்டிருக்கும்போது, கையில் வைத்திருந்த ஜூஸை யதேச்சையாகப் பார்த்தேன். பார்க்கும் போதுதான் தெரிந்தது, அதன் எக்ஸ்பையரி டேட் முடிந்து ஒரு மாதம் ஆகிறது என்று. சரி, வேறு பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்றுப் பார்த்தால் வரிசையாக எல்லா பாட்டிலிலும் ஒரே டேட் தான் இருந்தது.
அதிர்ச்சியாக என் கணவரிடம் காட்டினேன். அவர் கடைக்காரனிடம் கேட்டதற்கு ஏதேதோ சொல்லி மழுப்பினான். என் கணவர் காசைத் திருப்பிக் கேட்டார். அதற்குள் என் குழந்தை வேறு ஒரு பாட்டிலை எடுத்துப் பிரித்து விட்டாள். அவள் பிரித்ததை வைத்துக் கடைக்காரன் பிரச்சினை செய்தான். என் கணவர் கோபமாக என் குழந்தைக் கையில் வைத்திருந்த பாட்டிலைப் பிடுங்கி கடைக்காரன் கண்முன்னேத் தூக்கி எறிந்து விட்டார்.
"இதெல்லாம் ஏன் குழந்தைக்கு வாங்கிக் கொடுக்கிறே?" என்று எனக்குத்தான் திட்டு விழுந்தது. அந்த இடத்தை விட்டுக் கிளம்பும் போது, அடுத்தடுத்து வந்தவர்கள் அந்த ஜூஸை வாங்கிக் கொண்டே இருந்தார்கள். யாருமே அந்தப் பாட்டிலைக் கவனிக்கவே இல்லை. என் கணவர் திட்டியது கூட எனக்கு கஷ்டமாக இல்லை. ஆனால் யாருமே இந்த மாதிரி விஷயங்களைக் கவனிக்காமல் இருந்தது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
"இப்படி ஏமாத்துறாங்களே. நான் வேணுன்னா அவங்ககிட்ட சொல்லிட்டு வரவா?" கணவரிடம் கேட்டேன். அதற்கும் திட்டு விழுந்தது.
"அவனுக்கென்ன அக்கறை? வாங்கிக் குடிப்பவர்களுக்குத்தான் அறிவு வேண்டும்." என்று சொன்னார் என் கணவர்.
என்ன சொல்லணும்னு தெரியாமல் முழித்தேன்.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் அனைவரும் கவனமாக இருக்கத்தான் இதை எழுதுகிறேன். (முக்கியமாகக் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு)
Thursday, 19 August 2010
டீன்-ஏஜ்
எதிர் வீட்டு முரளியைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு சின்னக் குறுகுறுப்பு, சந்தோஷம், வெட்கம் எல்லாம் வந்தது அவளுக்கு. காலையில் அவன் வீட்டு வாசலில் வண்டியைத் துடைக்கும் அழகைப் பார்ப்பதற்காகவே புத்தகமும், கையுமாக ஜன்னலோரம் உட்கார்ந்து விடுவாள். தினமும் ஒரு தடவையாவது அவனைப் பார்க்காவிட்டால் அவளுக்குத் தூக்கமே வருவதில்லை. அவனும் அவளைப் பார்க்காமல் இல்லை. ஓரக் கண்ணால் அவள் செய்கைகளை ரசித்துக் கொண்டுதான் இருந்தான்.
ஒரு வருடமாகவே இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. இன்று சொல்லலாம், நாளை சொல்லலாம் என்று நினைத்து நினைத்துத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாள் அவள். சொல்லி விட்டால் இந்த சந்தோஷமும் நிலைக்காதோ? குழப்பமாக இருந்தது.
இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுத வேண்டும். படிப்பில் கவனம் சென்றால்தானே. இப்படி ஒரு அவஸ்தையை அனுபவிப்பதற்கு பேசாமல் நேரில் சொல்லி விடலாம் என்று நினைத்தாள். பாடப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே அவன் முகம்தான் ஞாபகம் வருகிறது. படிப்பு மண்டையில் ஏறவே இல்லை. புத்தகத்தை எரிச்சலுடன் மூடி வைத்தாள். மனம் திரும்பத் திரும்ப அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தது. எத்தனை நாள்தான் இந்த சுகமான அவஸ்தையை அனுபவிப்பது? முடிவுகட்டி விட்டாள். நாளைக் கண்டிப்பாக சொல்லியேத் தீர வேண்டும். சொல்லாமலேயே இருந்துவிட்டால் தன் வாழ்க்கைத் தன்னை விட்டுப் போய்விடும். என்ன ஆனாலும் சரி, அதன் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம். நாளை மனம் திறந்து பேசி விடுவது நல்லது. ஒரு முடிவுடன் உறங்கி விட்டாள்.
மறுநாள் காலை ஜன்னலோரம் எட்டிப் பார்த்துவிட்டு, பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் அப்பாவிடம் வந்தாள். "அப்பா, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்று இழுத்தாள். அவள் அப்பா அவளை நிமிர்ந்துப் பார்த்தார். அவ்வளவுதான்! அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்த அவள் அப்பா, "என்னம்மா, என்ன ஆச்சு?" என்று தலையைக் கோதினார். "அப்பா, என்னால் படிக்கவே முடியவில்லை. புத்தகத்தை எடுத்தாலே எதிர் வீட்டு முரளிதான் மனதில் வருகிறான். அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவனிடம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் என்ன செய்ய? " ஒரு வழியாக மனதில் உள்ளதைக் கொட்டி விட்டாள் அவள் தந்தையிடம்.
அவள் கையை ஆதரவாகப் பிடித்த அவள் தந்தை, "அவ்வளவுதானே! இதற்காகவா அழுகிறாய்? அவனைப் போய்ப் பார்க்க வேண்டுமா? போய்ப் பார்! அவனிடம் பேச வேண்டுமா? போய்ப் பேசு! உன் வயதில் இதுபோல எண்ணங்கள் வருவது சகஜம்தான். அவனிடம் நட்புடன் பழகு. அவனை நம் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வா. அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவன் தோற்றம் மட்டும் தான் உன் கண்ணுக்குத் தெரியும். அவனுடன் நட்புடன் பழகிப் பார்த்தால் தான் அவனுடைய குறைகளும் உனக்குத் தெரிய வரும். அப்போது உனக்குள் இருக்கும் அவனைப் பற்றிய கற்பனை பிம்பம் தானாக மறைந்து விடும். புரிகிறதா?" என்று சொன்னார்.
அப்பாவின் வார்த்தைகளைக் கேட்ட அவளுக்கு தெளிவு வந்தது. அப்பாவைப் பார்த்து மலர்ந்து சிரித்தாள். "சீக்கிரம் அவனை எனக்கும் அறிமுகம் செய்து வை. என் மகளின் மனதைத் திருடிய அந்த முதல் ஆண்மகனிடம் பேச எனக்கும் ஆசையாக உள்ளது" தன் மகளைப் பார்த்துக் கிண்டலடித்தார் அப்பா.
என் தோழி ஒருத்தி தான் படிக்கும் வயதில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட விஷயம் இது. அவள் தன் தந்தையைப் பற்றிப் பெருமையாகக் கூறினாள். "அன்று மட்டும் என் தந்தையிடம் என்னுடய நிலைமையைச் சொல்லாமல் இருந்து, என் தந்தையும் என்னைத் தெளிவுப்ப்டுத்தாமல் இருந்திருந்தால்? நான் அவனைக் கண்மூடித்தனமாகக் காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போய், வயிற்றில் புள்ளையோடுதான் வந்திருப்பேன். நல்லவேளை அவனிடம் நட்புடன் பழகிப் பார்த்தவுடன் தான் தெரிந்தது, அவன் என் வாழ்க்கைக்கெல்லாம் ஒத்து வரமாட்டான் என்று. அவனையே நினைத்துக் கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக என் வாழ்க்கையில் நான் கஷ்டப்பட்டிருப்பேன்." என்று சொன்னாள்.
தன் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை, அவஸ்தையைத் தன் தந்தையிடமே பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு பெண் யோசிக்கிறாள் என்றால், அவள் தந்தைத் தன் மகளிடம் எந்த அளவுக்கு நண்பராகப் பழகியிருப்பார். இது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகப் பட்டது எனக்கு.
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாகப் பழகினால் அவர்கள் வழித்தவறிப் போக வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
ஒரு வருடமாகவே இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. இன்று சொல்லலாம், நாளை சொல்லலாம் என்று நினைத்து நினைத்துத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தாள் அவள். சொல்லி விட்டால் இந்த சந்தோஷமும் நிலைக்காதோ? குழப்பமாக இருந்தது.
இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுத வேண்டும். படிப்பில் கவனம் சென்றால்தானே. இப்படி ஒரு அவஸ்தையை அனுபவிப்பதற்கு பேசாமல் நேரில் சொல்லி விடலாம் என்று நினைத்தாள். பாடப் புத்தகத்தைக் கையில் எடுத்தாலே அவன் முகம்தான் ஞாபகம் வருகிறது. படிப்பு மண்டையில் ஏறவே இல்லை. புத்தகத்தை எரிச்சலுடன் மூடி வைத்தாள். மனம் திரும்பத் திரும்ப அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தது. எத்தனை நாள்தான் இந்த சுகமான அவஸ்தையை அனுபவிப்பது? முடிவுகட்டி விட்டாள். நாளைக் கண்டிப்பாக சொல்லியேத் தீர வேண்டும். சொல்லாமலேயே இருந்துவிட்டால் தன் வாழ்க்கைத் தன்னை விட்டுப் போய்விடும். என்ன ஆனாலும் சரி, அதன் பிறகுப் பார்த்துக் கொள்ளலாம். நாளை மனம் திறந்து பேசி விடுவது நல்லது. ஒரு முடிவுடன் உறங்கி விட்டாள்.
மறுநாள் காலை ஜன்னலோரம் எட்டிப் பார்த்துவிட்டு, பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் அப்பாவிடம் வந்தாள். "அப்பா, உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்" என்று இழுத்தாள். அவள் அப்பா அவளை நிமிர்ந்துப் பார்த்தார். அவ்வளவுதான்! அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்த அவள் அப்பா, "என்னம்மா, என்ன ஆச்சு?" என்று தலையைக் கோதினார். "அப்பா, என்னால் படிக்கவே முடியவில்லை. புத்தகத்தை எடுத்தாலே எதிர் வீட்டு முரளிதான் மனதில் வருகிறான். அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவனிடம் பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது. என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் என்ன செய்ய? " ஒரு வழியாக மனதில் உள்ளதைக் கொட்டி விட்டாள் அவள் தந்தையிடம்.
அவள் கையை ஆதரவாகப் பிடித்த அவள் தந்தை, "அவ்வளவுதானே! இதற்காகவா அழுகிறாய்? அவனைப் போய்ப் பார்க்க வேண்டுமா? போய்ப் பார்! அவனிடம் பேச வேண்டுமா? போய்ப் பேசு! உன் வயதில் இதுபோல எண்ணங்கள் வருவது சகஜம்தான். அவனிடம் நட்புடன் பழகு. அவனை நம் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வா. அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவன் தோற்றம் மட்டும் தான் உன் கண்ணுக்குத் தெரியும். அவனுடன் நட்புடன் பழகிப் பார்த்தால் தான் அவனுடைய குறைகளும் உனக்குத் தெரிய வரும். அப்போது உனக்குள் இருக்கும் அவனைப் பற்றிய கற்பனை பிம்பம் தானாக மறைந்து விடும். புரிகிறதா?" என்று சொன்னார்.
அப்பாவின் வார்த்தைகளைக் கேட்ட அவளுக்கு தெளிவு வந்தது. அப்பாவைப் பார்த்து மலர்ந்து சிரித்தாள். "சீக்கிரம் அவனை எனக்கும் அறிமுகம் செய்து வை. என் மகளின் மனதைத் திருடிய அந்த முதல் ஆண்மகனிடம் பேச எனக்கும் ஆசையாக உள்ளது" தன் மகளைப் பார்த்துக் கிண்டலடித்தார் அப்பா.
என் தோழி ஒருத்தி தான் படிக்கும் வயதில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட விஷயம் இது. அவள் தன் தந்தையைப் பற்றிப் பெருமையாகக் கூறினாள். "அன்று மட்டும் என் தந்தையிடம் என்னுடய நிலைமையைச் சொல்லாமல் இருந்து, என் தந்தையும் என்னைத் தெளிவுப்ப்டுத்தாமல் இருந்திருந்தால்? நான் அவனைக் கண்மூடித்தனமாகக் காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போய், வயிற்றில் புள்ளையோடுதான் வந்திருப்பேன். நல்லவேளை அவனிடம் நட்புடன் பழகிப் பார்த்தவுடன் தான் தெரிந்தது, அவன் என் வாழ்க்கைக்கெல்லாம் ஒத்து வரமாட்டான் என்று. அவனையே நினைத்துக் கொண்டு இருந்திருந்தால் கண்டிப்பாக என் வாழ்க்கையில் நான் கஷ்டப்பட்டிருப்பேன்." என்று சொன்னாள்.
தன் மனதில் ஏற்பட்ட மாற்றங்களை, அவஸ்தையைத் தன் தந்தையிடமே பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு பெண் யோசிக்கிறாள் என்றால், அவள் தந்தைத் தன் மகளிடம் எந்த அளவுக்கு நண்பராகப் பழகியிருப்பார். இது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயமாகப் பட்டது எனக்கு.
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாகப் பழகினால் அவர்கள் வழித்தவறிப் போக வாய்ப்பில்லை என்பதை இதன் மூலம் தெரிந்துக் கொண்டேன்.
Wednesday, 18 August 2010
மெட்டி ஒலி
எப்போது ஊருக்குச் சென்றாலும் வீட்டில் கழட்டி வைத்திருக்கும் மெட்டியை மறக்காமல் காலில் மாட்டிக் கொண்டு போய்விடுவேன். வீட்டில் உள்ளவர்களிடம் வாங்கும் அர்ச்சனைகளைக் கேட்க முடியாமல் தான். இந்த முறை ஊருக்குச் செல்லும் போது அதை மறந்தேப் போய் விட்டேன். எப்போதும் அதைப் போட்டுக் கொள்ள ஞாபகப்படுத்தும் என் கணவர் இந்த முறை வீட்டில் நன்றாக வாங்கட்டும் என்று அவரும் விட்டுவிட்டார் போலும், மறந்தே போனார்.
வீட்டிற்குச் சென்றவுடன் காலில் மெட்டியைக் காணாமல் ஒரே திட்டு. அதைக் கழுவுவதற்காகக் கழட்டி வைத்தேன், மறந்தேப் போய்விட்டேன் என்று சமாளித்துப் பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என்று அர்ச்சனை மேல் அர்ச்சனையாக விழுந்து கொண்டிருந்தது.
"நீங்கள் இதற்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள் மாப்பிள்ளை" என்று மாப்பிள்ளைக்கு அறிவுரை வேறு. "இதெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். அவள் தாலியைக் கழட்டி வைத்தால் கூட நான் ஒன்றும் சொல்லுவதில்லை." நல்லபிள்ளையாக சமயம் பார்த்து உசுப்பேற்றி விட்டார் என் கணவர். நான் அவரைப் பார்த்து முறைத்தேன்.
"தாலியை வேறு கழட்டி வைக்கிறாளா?" என்று மேலும் மேலும் அர்ச்சனைகள் தொடர்ந்துக் கொண்டிருந்தது. பொறுக்க முடியவில்லை. "மெட்டியைக் காலில் மாட்டினால் எனக்கு மிகவும் அலர்ஜியாகிறது" பொய் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொன்னேன். யாரும் புரிந்து கொள்ளவில்லை. தாலி, நெற்றியில் வைக்கும் குங்குமம், மெட்டி இதெல்லாம் குடும்பப் பெண்களுக்கு முக்கியம் என்கிற ரீதியில் அர்ச்சனைகள் தொடர்ந்துக் கொண்டேயிருந்தது. சிறு வயதில் இருந்தே கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் எல்லாம் மாட்டிவிட்டு பழக்கியது போல், மெட்டியையும் போட்டுப் பழக்கியிருக்க வேண்டியதுதானே" எதிர்க் கேள்வி கேட்டேன் அப்பாவிடம். உடனே அம்மா, "எப்படியெல்லாம் பேசிப் பழகியிருக்கிறாள். பாருங்கள்" என்று முணுமுணுத்துக் கொண்டே கையில் வைத்திருந்த டம்ளரை 'டொங்க்" என்ற சத்தத்துடன் வைத்தார். காது கிழிந்தது. சே... ஏந்தான் ஊருக்கு வந்தோமோ என்றிருந்தது.
கணவர், "நன்றாக மாட்டிக் கொண்டாயா?" என்று நக்கலாக என்னைப் பார்த்து சிரித்தார். அவருக்கு இதிலெல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லைதான். இருந்தாலும் சமயம் பார்த்துக் காலை வாரி விட்டார் பாருங்கள். கடுப்பாகத் தான் இருந்தது. சரி. சமாளித்தாக வேண்டுமே. என்ன செய்ய? "சரிப்பா. அலர்ஜியாகி, புண்ணாகி விட்டதால் போடாமல் விட்டேன். வேறொன்று வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே. அதற்கு கூட அவர் எனக்கு நேரம் ஒதுக்குவதில்லை. நான் என்ன செய்ய?", கொஞ்சம் கண் கலங்கியவாறு அப்பாவிடம் கேட்டேன். அப்பா கொஞ்சமாகப் பரிதாபப்பட்டார். "மாட்டினீங்களா?" ஜாடையாகக் கேட்டேன் என் கணவரிடம். அப்பா, " மாப்பிள்ளை...." என்று இழுத்துக் கொண்டே கணவரிடம் திரும்பினார். அப்பாடா என்றிருந்தது. மாப்பிள்ளை என்பதால் கட்டாயம் அர்ச்சனைகள் விழப்போவதில்லை. நான் தப்பித்தேனடா சாமி என்று ஓட்டமாக ஓடி விட்டேன். அந்த நாள் மெட்டிச் சத்தத்தால் ஓய்ந்து போனது.
மறுநாள் ஊருக்குத் திரும்பும்போது என் கணவர், "மெட்டி வாங்கித் தர நேரமில்லைன்னு வீட்ல சொன்னேல்ல. ஒரு டஜன் மெட்டி வாங்கித் தர்றேன். இனிமே அதைக் கழட்டினேன்னு வை, அப்புறம் ஊர்ல இருக்கிறவங்களுக்கு ஃபோன் போட ஆரம்பிச்சிடுவேன். புரியுதா?" என்று கொஞ்சம் மிரட்டினார். "என்ன இருந்தாலும் உங்களை விட எங்க வீட்ல உள்ளவங்களுக்கு முற்போக்கு சிந்தனை கொஞ்சம் கம்மிதானே. அவங்கள என்னப் பண்றது?" ஆறுதல் சொன்னேன் அவ்ரிடம். பெருமூச்சு விட்டபடி தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.
எனக்கு தூக்கமே வரவில்லை. உண்மையில் இந்த மாதிரி ஆபரணங்களில் எல்லாம் எனக்குப் பெரிதாக ஆர்வமுமில்லை, நம்பிக்கையுமில்லை. அது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். ஆரம்பத்தில் மெட்டியைப் போடவேக் கூடாது என்றெல்லாம் நான் நினைக்கவே இல்லை.
திருமணத்தன்று மெட்டியைக் காலில் மாட்டும் போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அது கொஞ்சம் லூசாக இருந்ததால் நடக்கும் போதெல்லாம் கழன்று வந்து விடும். மறுநாளே கழட்டி வைத்துவிட்டால் தவறாக நினைப்பார்களோ என்று விரலால் கவ்விக் கொண்டு கொஞ்சம் தத்தித் தத்தி நடந்தேன். மாமியார் வீட்டில் "சேலைக் கட்டிப் பழக்கமே இல்லையா. இப்படி நடக்கிறாய்" என்று சந்தேகத்துடன் கேட்டார்கள். தயக்கத்துடன் விஷயத்தைச் சொன்னேன். "ஓ.. அப்படியா? சரி. சரி.. மாற்றி விடலாம்" என்று வேறொரு மெட்டியை வாங்கி வந்துக் காலில் மாட்டிவிட்டார்கள். அது கொஞ்சம் பரவாயில்லை.
இதுவரை கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் என்று அனைத்து விதமான ஆபரணங்களும் போட்டுப் பழகியிருந்ததால் அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் புதிதாகப் போட்டிருந்த மெட்டி கொஞ்சம், கொஞ்சமாக உறுத்த ஆரம்பித்தது. நடக்கும் போதெல்லாம் கால் விரல்களை இறுக்கிப் பிடித்திருந்ததால் எரிச்சலாக இருந்தது. ஒரு ஆறு மாதக் காலம் அதை மாட்டிக் கொண்டே இருந்தேன். கால் விரல்களில் அரிக்க ஆரம்பித்தது. அதை மேலும் கீழும் அசைக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டுத்தான் அந்த மெட்டியைக் கழட்டினேன். கழட்டி விட்டுப் பார்த்தால் மெட்டிப் போட்டிருந்த விரலில் புண்ணாகிப் போயிருந்தது. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் போடாவிட்டால் என்ன. என்று அதைத் திரும்ப மாட்டவே இல்லை.
ஆரம்பக்காலத்தில் மெட்டி என்பது திருமணமான ஆண்களுக்குத்தான் என்றிருந்ததாம். ஒரு பெண் திருமணமானவள் என்று அவளின் தாலியைப் பார்த்து எப்படி அடையாளம் தெரிந்துக் கொள்வார்களோ அதைப் போல ஒரு ஆண் திருமணமானவன் என்பதை அவன் காலில் அணிந்திருக்கும் மெட்டியைப் பார்த்துத் தெரிந்துக் கொள்வார்களாம். (நான் சொல்வது அந்தக் காலத்தில்). ஆனால் காலப்போக்கில் ஆண்கள் இதையும் பெண்கள் தலையிலேயேக் கட்டி விட்டார்கள் என்று படித்திருக்கிறேன். இன்று வரை ஆண்களுக்குத் திருமணமானவன் என்ற அடையாளம் ஒன்று கூட இல்லை. ஆனால் பெண்களுக்கு எல்லாமே கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. அது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் கணவர் மேல் உள்ள அன்பினால் மட்டும்தான் பெண்கள் அதைச் சுமக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு பெண் முற்போக்குத்தனமாக சிந்தித்தால் இந்தச் சமுதாயம் அவளைப் பழிப்பது மிகப் பெரிய வேதனை!
வீட்டிற்குச் சென்றவுடன் காலில் மெட்டியைக் காணாமல் ஒரே திட்டு. அதைக் கழுவுவதற்காகக் கழட்டி வைத்தேன், மறந்தேப் போய்விட்டேன் என்று சமாளித்துப் பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. அப்பா ஒரு பக்கம், அம்மா ஒரு பக்கம் என்று அர்ச்சனை மேல் அர்ச்சனையாக விழுந்து கொண்டிருந்தது.
"நீங்கள் இதற்கெல்லாம் இடம் கொடுக்காதீர்கள் மாப்பிள்ளை" என்று மாப்பிள்ளைக்கு அறிவுரை வேறு. "இதெல்லாம் அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். அவள் தாலியைக் கழட்டி வைத்தால் கூட நான் ஒன்றும் சொல்லுவதில்லை." நல்லபிள்ளையாக சமயம் பார்த்து உசுப்பேற்றி விட்டார் என் கணவர். நான் அவரைப் பார்த்து முறைத்தேன்.
"தாலியை வேறு கழட்டி வைக்கிறாளா?" என்று மேலும் மேலும் அர்ச்சனைகள் தொடர்ந்துக் கொண்டிருந்தது. பொறுக்க முடியவில்லை. "மெட்டியைக் காலில் மாட்டினால் எனக்கு மிகவும் அலர்ஜியாகிறது" பொய் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொன்னேன். யாரும் புரிந்து கொள்ளவில்லை. தாலி, நெற்றியில் வைக்கும் குங்குமம், மெட்டி இதெல்லாம் குடும்பப் பெண்களுக்கு முக்கியம் என்கிற ரீதியில் அர்ச்சனைகள் தொடர்ந்துக் கொண்டேயிருந்தது. சிறு வயதில் இருந்தே கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் எல்லாம் மாட்டிவிட்டு பழக்கியது போல், மெட்டியையும் போட்டுப் பழக்கியிருக்க வேண்டியதுதானே" எதிர்க் கேள்வி கேட்டேன் அப்பாவிடம். உடனே அம்மா, "எப்படியெல்லாம் பேசிப் பழகியிருக்கிறாள். பாருங்கள்" என்று முணுமுணுத்துக் கொண்டே கையில் வைத்திருந்த டம்ளரை 'டொங்க்" என்ற சத்தத்துடன் வைத்தார். காது கிழிந்தது. சே... ஏந்தான் ஊருக்கு வந்தோமோ என்றிருந்தது.
கணவர், "நன்றாக மாட்டிக் கொண்டாயா?" என்று நக்கலாக என்னைப் பார்த்து சிரித்தார். அவருக்கு இதிலெல்லாம் பெரிதாக நம்பிக்கை இல்லைதான். இருந்தாலும் சமயம் பார்த்துக் காலை வாரி விட்டார் பாருங்கள். கடுப்பாகத் தான் இருந்தது. சரி. சமாளித்தாக வேண்டுமே. என்ன செய்ய? "சரிப்பா. அலர்ஜியாகி, புண்ணாகி விட்டதால் போடாமல் விட்டேன். வேறொன்று வாங்கிக் கொடுக்க வேண்டியது தானே. அதற்கு கூட அவர் எனக்கு நேரம் ஒதுக்குவதில்லை. நான் என்ன செய்ய?", கொஞ்சம் கண் கலங்கியவாறு அப்பாவிடம் கேட்டேன். அப்பா கொஞ்சமாகப் பரிதாபப்பட்டார். "மாட்டினீங்களா?" ஜாடையாகக் கேட்டேன் என் கணவரிடம். அப்பா, " மாப்பிள்ளை...." என்று இழுத்துக் கொண்டே கணவரிடம் திரும்பினார். அப்பாடா என்றிருந்தது. மாப்பிள்ளை என்பதால் கட்டாயம் அர்ச்சனைகள் விழப்போவதில்லை. நான் தப்பித்தேனடா சாமி என்று ஓட்டமாக ஓடி விட்டேன். அந்த நாள் மெட்டிச் சத்தத்தால் ஓய்ந்து போனது.
மறுநாள் ஊருக்குத் திரும்பும்போது என் கணவர், "மெட்டி வாங்கித் தர நேரமில்லைன்னு வீட்ல சொன்னேல்ல. ஒரு டஜன் மெட்டி வாங்கித் தர்றேன். இனிமே அதைக் கழட்டினேன்னு வை, அப்புறம் ஊர்ல இருக்கிறவங்களுக்கு ஃபோன் போட ஆரம்பிச்சிடுவேன். புரியுதா?" என்று கொஞ்சம் மிரட்டினார். "என்ன இருந்தாலும் உங்களை விட எங்க வீட்ல உள்ளவங்களுக்கு முற்போக்கு சிந்தனை கொஞ்சம் கம்மிதானே. அவங்கள என்னப் பண்றது?" ஆறுதல் சொன்னேன் அவ்ரிடம். பெருமூச்சு விட்டபடி தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார்.
எனக்கு தூக்கமே வரவில்லை. உண்மையில் இந்த மாதிரி ஆபரணங்களில் எல்லாம் எனக்குப் பெரிதாக ஆர்வமுமில்லை, நம்பிக்கையுமில்லை. அது அவரவர் மனதைப் பொறுத்த விஷயம். ஆரம்பத்தில் மெட்டியைப் போடவேக் கூடாது என்றெல்லாம் நான் நினைக்கவே இல்லை.
திருமணத்தன்று மெட்டியைக் காலில் மாட்டும் போது மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அது கொஞ்சம் லூசாக இருந்ததால் நடக்கும் போதெல்லாம் கழன்று வந்து விடும். மறுநாளே கழட்டி வைத்துவிட்டால் தவறாக நினைப்பார்களோ என்று விரலால் கவ்விக் கொண்டு கொஞ்சம் தத்தித் தத்தி நடந்தேன். மாமியார் வீட்டில் "சேலைக் கட்டிப் பழக்கமே இல்லையா. இப்படி நடக்கிறாய்" என்று சந்தேகத்துடன் கேட்டார்கள். தயக்கத்துடன் விஷயத்தைச் சொன்னேன். "ஓ.. அப்படியா? சரி. சரி.. மாற்றி விடலாம்" என்று வேறொரு மெட்டியை வாங்கி வந்துக் காலில் மாட்டிவிட்டார்கள். அது கொஞ்சம் பரவாயில்லை.
இதுவரை கழுத்தில் செயின், கையில் வளையல், காதில் கம்மல் என்று அனைத்து விதமான ஆபரணங்களும் போட்டுப் பழகியிருந்ததால் அதெல்லாம் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் புதிதாகப் போட்டிருந்த மெட்டி கொஞ்சம், கொஞ்சமாக உறுத்த ஆரம்பித்தது. நடக்கும் போதெல்லாம் கால் விரல்களை இறுக்கிப் பிடித்திருந்ததால் எரிச்சலாக இருந்தது. ஒரு ஆறு மாதக் காலம் அதை மாட்டிக் கொண்டே இருந்தேன். கால் விரல்களில் அரிக்க ஆரம்பித்தது. அதை மேலும் கீழும் அசைக்கவே முடியவில்லை. கஷ்டப்பட்டுத்தான் அந்த மெட்டியைக் கழட்டினேன். கழட்டி விட்டுப் பார்த்தால் மெட்டிப் போட்டிருந்த விரலில் புண்ணாகிப் போயிருந்தது. அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் போடாவிட்டால் என்ன. என்று அதைத் திரும்ப மாட்டவே இல்லை.
ஆரம்பக்காலத்தில் மெட்டி என்பது திருமணமான ஆண்களுக்குத்தான் என்றிருந்ததாம். ஒரு பெண் திருமணமானவள் என்று அவளின் தாலியைப் பார்த்து எப்படி அடையாளம் தெரிந்துக் கொள்வார்களோ அதைப் போல ஒரு ஆண் திருமணமானவன் என்பதை அவன் காலில் அணிந்திருக்கும் மெட்டியைப் பார்த்துத் தெரிந்துக் கொள்வார்களாம். (நான் சொல்வது அந்தக் காலத்தில்). ஆனால் காலப்போக்கில் ஆண்கள் இதையும் பெண்கள் தலையிலேயேக் கட்டி விட்டார்கள் என்று படித்திருக்கிறேன். இன்று வரை ஆண்களுக்குத் திருமணமானவன் என்ற அடையாளம் ஒன்று கூட இல்லை. ஆனால் பெண்களுக்கு எல்லாமே கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. அது கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும் கணவர் மேல் உள்ள அன்பினால் மட்டும்தான் பெண்கள் அதைச் சுமக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு பெண் முற்போக்குத்தனமாக சிந்தித்தால் இந்தச் சமுதாயம் அவளைப் பழிப்பது மிகப் பெரிய வேதனை!
Tuesday, 10 August 2010
பாசம்! (ஒரு துக்க நிகழ்வு)
அந்த வீட்டுத் தொலைபேசி அடித்துக் கொண்டே இருந்தது. அந்த வீட்டுப் பெண்மணி தான் எடுத்தார். பேசிவிட்டு வந்தவர் கணவனிடம், "கிராமத்திலிருந்து ஃபோன் வந்திருக்கு. என் கூடப் பிறந்த அண்ணன் சீனிச்சாமி இறந்துட்டானாம். நமக்கும், அவனோட பத்து, பதினெஞ்சு வருஷமா தொடர்பே இல்லாமப் போச்சு. என்ன பண்றது? கூடப் பொறந்துத் தொலைச்சுட்டானே" என்றார்.
கணவர், "இப்ப என்ன பண்ணலாம்? சாவுக்குப் போகலாமா, வேண்டாமா?".
"என்ன இப்படி கேட்டுட்டீங்க? என் கூடப் பொறந்தப் பொறப்பாச்சே. என்னால எப்படி அவன மறக்க முடியும்? இவ்வளவு சீக்கிரம் அவன் இறந்து போவான்னு நினைக்கவே இல்லை. அவசரப்பட்டு என்னவெல்லாம் சொல்லி திட்டியிருப்பேன். என்ன இருந்தாலும் என் அண்ணன் தானே. அவன் மேல் தப்பே இருந்தாலும் நானாவது பொருத்துப் போயிருக்கலாம். பாவம்! இப்பப் போய்ச் சேர்ந்துட்டானே. எல்லாமே உங்களால தான் போங்க." என்று இறந்த தன் அண்ணனுக்காகக் கண்ணீர் விட்டார் அந்தம்மா.
"சரி சரி. சீக்கிரம் கிளம்பு, போயிட்டு வந்திரலாம்.", கணவர் மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
வெளியூரில் இருக்கும் தன் பிள்ளைகளுக்கு அந்தம்மா தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னார். "என் அண்ணன் போய்ச் சேர்ந்துட்டானேப்பா." என்று அழுதார். பிள்ளைகள் அம்மாவுக்கு ஆறுதல் கூறினார்கள்.
இருவரும் கிராமத்திற்குச் சென்றார்கள். கிராமத்தில் நுழைந்தவுடன், தன் அண்ணனை நினைத்து அழுதுகொண்டே சென்றார். எதிரில் தென்பட்ட உறவினர் மகனுடன் இருவரும் துக்கம் நடந்த வீட்டுக்குச் சென்றனர். அங்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் கண்ணில் தென்படவில்லை. இறந்த அண்ணனின் முகம் நன்றாகக் கருத்துப் போயிருந்தது. சிறிது நேரம் ஒருவிதக் குழப்பத்துடன் தன் அண்ணனைப் பார்த்து புலம்பியவர், "என்னப்பா, அண்ணனோட மகன்கள் யாரையுமேக் காணோம்?" என்று அருகில் இருந்தவரிடம் விசாரித்தார். அப்போதுதான் புரிந்தது, தான் வந்தது 'சீனிச்சாமி' என்ற பெயரில் உள்ள வேறு ஒரு உறவினரின் துக்க நிகழ்வுக்கு என்று.
தன் அண்ணனைப் பார்த்து பத்து வருடங்களுக்கும் மேலாகி விட்டது. இறந்த அந்த உறவினரும் தன் அண்ணனைப் போலவே இருந்ததால் கொஞ்சமல்ல, நிறையவே குழப்பமாகி விட்டது. ஏதோ வந்தது வந்துவிட்டோம், துக்க நிகழ்ச்சியில் கொஞ்ச நேரம் கலந்து விட்டுப் போய் விடலாம் என்று அமைதியாக இருந்தனர் கணவனும், மனைவியும்.
அப்போது அதே கிராமத்தில் குடியிருந்த, இறந்ததாக நினைத்த அதே அண்ணன் எதிரே வந்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்தப் பெண்மணியின் கணவர், " வரும் போது உன் அண்ணனை நினைத்து அழுது கொண்டே வந்தாயே, போய்ப் பேசுகிறாயா? " என்றுக் கேட்டார்.
அவ்வளவுதான்! உடனே அந்தம்மா, " அவன் கிட்ட என்னப் பேச்சு வேண்டிக்கிடக்கு? அவன் பண்ணினக் கூத்துக்கு இங்க வந்ததேப் பெரிய விஷயம். அவனாச் சாவான்? இருக்கிறவங்களை எல்லாம் சாகடிப்பான். " என்றாரே பார்க்கலாம். கணவர் வாயடைத்து நின்றார்.
இல்லாத போது ஏங்கும் மனது, இருக்கும் போது தூற்றுவது ஏனோ?! கலிகாலம்டா சாமி!
Monday, 9 August 2010
கனவு கண்டேன்!
சிறு பிள்ளைப் போல் துள்ளித் திரியக் கனவு கண்டேன்!
பெண் பிள்ளைப் போல் அடக்க, ஒடுக்கமாய் இரு.
ஆசைப்பட்டான் அண்ணன்.
மேலே படிக்க கனவு கண்டேன்!
படிப்பெதற்கு, சமையல் பழகு.
ஆசைப்பட்டார் அம்மா.
சாதனை செய்யக் கனவு கண்டேன்!
இந்த மாப்பிள்ளை உனக்கு ரொம்பப் பொருத்தம்.
ஆசைப்பட்டார் அப்பா.
அனைவரது ஆசைகளும் நிறைவேறியது.
தேங்கிப்போனது என் கனவுகள் மட்டுமே!
பெண் பிள்ளைப் போல் அடக்க, ஒடுக்கமாய் இரு.
ஆசைப்பட்டான் அண்ணன்.
மேலே படிக்க கனவு கண்டேன்!
படிப்பெதற்கு, சமையல் பழகு.
ஆசைப்பட்டார் அம்மா.
சாதனை செய்யக் கனவு கண்டேன்!
இந்த மாப்பிள்ளை உனக்கு ரொம்பப் பொருத்தம்.
ஆசைப்பட்டார் அப்பா.
அனைவரது ஆசைகளும் நிறைவேறியது.
தேங்கிப்போனது என் கனவுகள் மட்டுமே!
Saturday, 7 August 2010
பயணத்தில்......
சில வருடங்களுக்கு முன்பு பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தது. பஸ்ஸில் மூதாட்டி ஒருவரின் இருக்கைக்கு அருகில் இடம் இருந்தது. அவருக்குத் தலை நன்றாக நரைத்திருந்தது. கண்கள் சோர்வாக, வாயில் வெத்தலை மென்று கொண்டிருந்தார். நான் அவ்ர் அருகில் சென்று, "கொஞ்சம் தள்ளி உட்காருங்க பாட்டி" என்று சொன்னேன். அவர் என்னை ஒருமாதிரியாக முறைத்துப் பார்த்துவிட்டு தள்ளி உட்கார்ந்தார். தள்ளித் தானே உட்காரச் சொன்னோம் ஏன் இப்படி முறைக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்த அவர், "உன் வயதில் எனக்கொரு மகள் இருக்கிறாள். ஆனால் நீ என்னைப் பாட்டி என்று சொல்கிறாயே?" என்றார். ஓ... அவர் முறைப்பின் காரணம் நன்றாகப் புரிந்தது.
அது சின்ன விஷயம் தான். ஆனாலும் ஏனோ என் மனம் அவர் வயதில் உள்ளவர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது. தனக்கு வயதாகி விட்டதே என்றக் கோபத்தில் அவர் அப்படிச் சொன்னாரா? அல்லது இளமைப் போய் விட்டதே என்ற வருத்தத்தில் சொன்னாரா எனக்குத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர் தன் தோற்றத்தில் மட்டுமே அப்படி இருந்திருக்கலாம். அது தெரியாமல் அப்படிச் சொன்னது என் தவறுதான்.
நம் அனைவருக்குமே சிறு வயதில் செய்த குறும்புகளும், நினைவுகளும், அந்த நாட்கள் திரும்பக் கிடைக்காதா என்ற ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சிறு வயதில் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மகிழ்ந்த நமக்கு வயது ஏற, ஏற அதன் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடுகிறதே. ஏன்? ஒருவேளை வயதாகி விட்டதே என்ற சலிப்புதான் காரணமோ? இன்றைய உலகில் நாம் அனைவருமே தோற்றத்தாலும், மனதாலும் இளமையாக இருப்பதைத்தான் விரும்புகிறோம். ஆனாலும் யாராவது நமக்கு வயதாவதை சுட்டிக் காட்டும்போது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது.
நம் குழந்தை வயதை ஒத்த குழந்தைகள் நம்மை ஆன்ட்டி, அங்கிள் என்று கூப்பிடும்போது பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் அதையே வளர்ந்த டீன்-ஏஜ் பெண் சொன்னால்?.. அதற்காக பெரிதாக வருத்தப்படவில்லை என்றாலும், இவ்வளவு பெரிய பெண்ணாக இருந்து கொண்டு ஒரு குழந்தைக்குத் தாயானக் காரணத்தினாலேயே நம்மை ஆன்ட்டி என்கிறாளே என்ற ஒரு சின்ன முணுமுணுப்பாவது இருக்கத்தான் செய்கிறது. அப்போது இளமைக் கால நினைவுகள் நம்மை ஏங்க வைக்கின்றன.
நமக்கு இருக்கும் இதே ஏக்கங்கள் தானே நம்மை விடப் பெரியவர்களுக்கும் இருக்கும். அவர்களை விட சிறு வயதில் உள்ளவர்கள் பெரிசு, கிழவி, கிழம் என்றெல்லாம் அழைக்கும் போது அவர்களுக்கும் அந்த வருத்தம் இருக்கத்தானே செய்யும். காலம் வேகமாக் ஓடுவதில் அந்த வருத்தத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வயதாகி விட்டதன் சலிப்பு ஒவ்வொரு முதியவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
இப்போதெல்லாம் என்னை விடப் பெரியவர்களை வாங்க, போங்க என்று பொதுவாகத்தான் அழைக்கிறேன். இல்லையென்றால் உங்களை நான் எப்படிக் கூப்பிட வேண்டும்? என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டுதான் கூப்பிடுகிறேன். அதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி, அவர்கள் விருப்பப்படியே அழைப்பதில் எனக்கும் மகிழ்ச்சி!
அது சின்ன விஷயம் தான். ஆனாலும் ஏனோ என் மனம் அவர் வயதில் உள்ளவர்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியது. தனக்கு வயதாகி விட்டதே என்றக் கோபத்தில் அவர் அப்படிச் சொன்னாரா? அல்லது இளமைப் போய் விட்டதே என்ற வருத்தத்தில் சொன்னாரா எனக்குத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர் தன் தோற்றத்தில் மட்டுமே அப்படி இருந்திருக்கலாம். அது தெரியாமல் அப்படிச் சொன்னது என் தவறுதான்.
நம் அனைவருக்குமே சிறு வயதில் செய்த குறும்புகளும், நினைவுகளும், அந்த நாட்கள் திரும்பக் கிடைக்காதா என்ற ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சிறு வயதில் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மகிழ்ந்த நமக்கு வயது ஏற, ஏற அதன் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடுகிறதே. ஏன்? ஒருவேளை வயதாகி விட்டதே என்ற சலிப்புதான் காரணமோ? இன்றைய உலகில் நாம் அனைவருமே தோற்றத்தாலும், மனதாலும் இளமையாக இருப்பதைத்தான் விரும்புகிறோம். ஆனாலும் யாராவது நமக்கு வயதாவதை சுட்டிக் காட்டும்போது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது.
நம் குழந்தை வயதை ஒத்த குழந்தைகள் நம்மை ஆன்ட்டி, அங்கிள் என்று கூப்பிடும்போது பெரிதாக ஒன்றும் தோன்றுவதில்லை. ஆனால் அதையே வளர்ந்த டீன்-ஏஜ் பெண் சொன்னால்?.. அதற்காக பெரிதாக வருத்தப்படவில்லை என்றாலும், இவ்வளவு பெரிய பெண்ணாக இருந்து கொண்டு ஒரு குழந்தைக்குத் தாயானக் காரணத்தினாலேயே நம்மை ஆன்ட்டி என்கிறாளே என்ற ஒரு சின்ன முணுமுணுப்பாவது இருக்கத்தான் செய்கிறது. அப்போது இளமைக் கால நினைவுகள் நம்மை ஏங்க வைக்கின்றன.
நமக்கு இருக்கும் இதே ஏக்கங்கள் தானே நம்மை விடப் பெரியவர்களுக்கும் இருக்கும். அவர்களை விட சிறு வயதில் உள்ளவர்கள் பெரிசு, கிழவி, கிழம் என்றெல்லாம் அழைக்கும் போது அவர்களுக்கும் அந்த வருத்தம் இருக்கத்தானே செய்யும். காலம் வேகமாக் ஓடுவதில் அந்த வருத்தத்தை மறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வயதாகி விட்டதன் சலிப்பு ஒவ்வொரு முதியவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.
இப்போதெல்லாம் என்னை விடப் பெரியவர்களை வாங்க, போங்க என்று பொதுவாகத்தான் அழைக்கிறேன். இல்லையென்றால் உங்களை நான் எப்படிக் கூப்பிட வேண்டும்? என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டுதான் கூப்பிடுகிறேன். அதில் அவர்களுக்கும் மகிழ்ச்சி, அவர்கள் விருப்பப்படியே அழைப்பதில் எனக்கும் மகிழ்ச்சி!
Subscribe to:
Posts (Atom)