Thursday 29 July, 2010

அன்றும், இன்றும் (ஆண்மனம்)

அன்று
"நீ பேசறத கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு"
இன்று
"நீ வாயைத் தொறந்தாலே எரிச்சலா இருக்கு"


அன்று
"உன் கூட இருந்தா நேரம் போறதே தெரியல"
இன்று
"உன் கூட இருக்கிற ஒவ்வொரு நேரமும் நரகமா இருக்கு"

அன்று
"உன் கையால சமைச்சத சாப்பிட கொடுத்து வச்சிருக்கணும்"
இன்று
"இத மனுஷன் சாப்பிடுவானா?"

அன்று
"வாழ்நாள் பூரா உன் கூடவே இருக்கணும் போல இருக்கு"
இன்று
"சீக்கிரம் உன் அம்மா வீட்டுக்குப் போ!"

முரண்பட்டது ஆண்மனம்!
புண்பட்டதென்னவோ பெண்மனம்தான்!

2 comments:

vasan said...

மாறிய‌து எண்ண‌ம்,
மாற்றிய‌து யாரோ?
சில ச‌ம‌ய‌ங்க‌ளில்
பெண்க‌ள் காத‌லியாய் இனித்து
ம‌ணைவியாய் க‌ச‌க்கிறார்க‌ளா?
க‌ச‌க்குறார்க‌ளா?

Valarmathi said...

உண்மையான ஒன்று....