Friday 6 August, 2010

சில எச்சரிக்கைகள் உங்களின் கவனத்திற்கு!

இந்த எச்சரிக்கைகள் சிலருக்கு தெரிந்திருக்கலாம், பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்த சிலர் தெரியாதவர்களுக்குச் சொல்லுங்கள், தெரியாத பலர் இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

1.  நாம் வாங்கும் அனைத்துப் பொருள்களுக்கும் Expiry date உள்ளது   நமக்குத்தெரியும். அதுபோல் கேஸ் சிலிண்டருக்கும் உள்ளது. அது நம் பலருக்குத் தெரிவதில்லை. சிலிண்டரின் கைப்பிடிக்கு அருகில் குனிந்துப் பார்த்தால் C-08 என்று எழுதியிருக்கும். C - என்பது 3rd Quarter-ஐக் குறிக்கும். 08 என்பது வருடத்தைக் குறிக்கும்.
அதில்
A என்று இருந்தால் 1st Quarter (ஜனவரி - மார்ச் வரை), 
B எனில் 2nd Quarter (ஏப்ரல் - ஜூன் வரை),
C எனில் 3rd Quarter (ஜூலை - செப்டம்பர் வரை),
D எனில் 4th Quarter அதாவது (அக்டோபர் - டிசம்பர்) ஐக் குறிக்கும்.

இப்போது நம்முடைய சிலிண்டரில் B-09 என்று பெயிண்ட் பண்ணப்பட்டிருந்தால் அதை ஏப்ரலிலிருந்து ஜூன் 2009 வரைதான் உபயோகிக்க வேண்டும். அதில் expiry date முடிந்து விட்டால் கண்டிப்பாக dealer-ரிடம் கொடுத்து விட வேண்டும்.

2. நாம் வாங்கும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், குழந்தைகளுக்குக் கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் அனைத்தையும் கவனமுடன் வாங்குவது மிக முக்கியம். அதன் உபயோகத்தன்மையைக் கண்டுபிடிப்பது எப்படி?


பாட்டில்களின் அடியில் முக்கோணக் குறியீட்டுடன் நம்பர் இருக்கும். அந்த முக்கோணக் குறியீட்டில்

1 என்று இருந்தால், அது  PET பாட்டில்கள், மினரல் வாட்டர் பாட்டில்கள், ஃப்ரிட்ஜூக்குள் வைக்கும் பாட்டில்கள் வகையைச் சேர்ந்தது. சூடு இல்லாத இடங்களில் வைத்து உபயோகித்தால் 2 மாதங்கள் வரை உபயோகிக்கலாம்.


2 - ஸ்வீட் பாக்ஸ், ஹோட்டல்களில் உணவுக் கட்டித்தரும் டப்பாக்கள்.


3 - இதில் டயாக்ஸின் என்ற நச்சு வாயு உள்ளது. சூடான பொருளை இதில் வைக்கவே கூடாது.


4 - இது தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜூக்குள் வைத்துப் பயன்படுத்த மட்டுமே ஏற்றது. இதை வாங்காமல் இருப்பது நல்லது.


5 - இந்த வகைப் பிளாஸ்டிக்குகள் ஜூஸ் உறிஞ்சும் ஸ்ட்ராக்கள், பேரீட்சை வைக்கும் டப்பாக்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா வகைப் பொருள்களும் வைக்க ஏற்றது. இந்த நம்பரில் உள்ள பாட்டில்கள், டப்பாக்கள் தரமானது.


6 - யூஸ் அண்ட் த்ரோ பாட்டில்கள்.


நம்பர் எதுவுமின்றி வருவதை வாங்காமல் இருப்பது நல்லது.


குழந்தைகளுக்கான பால் பாட்டில் வாங்கும் போது 'BPA FREE' என்று குறிப்பிட்ட பாட்டிலையே வாங்கணுமாம்.
3. வீட்டிற்கு வெளியே ஒவ்வொருப் பொருளை வாங்கும் போதும் Expiry date பார்த்தே வாங்குவோம். ஆனால் புதிதாக வாங்கி வரும் மளிகைப் பொருள்களைப் பிரித்து அப்படியே மிச்சம் இருக்கும் டப்பாக்களில் கொட்டி விடுவதுண்டு. இது மிகவும் தவறு. Expiry date  முடிந்த அந்தப் பொருட்கள் அப்படியே அதில் கலந்து விடும். இதில் மிகவும் கவனம் தேவை.


4. நாம் வாங்கும் பால் பாக்கெட்டுகளிலும் expiry date உள்ளது. ஆனால் பால் வாங்கும் போது அதை நாம் கவனிப்பதேயில்லை. பால் பாக்கெட்டுக்களில் அன்றையத் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தத் தேதியிலிருந்து ஒருநாள்தான் வைத்திருக்க வேண்டும். இதைக் கவனிக்காமல் வாங்கிய அனுபவம் எனக்கு உண்டு. அதைப் பார்க்காமல் பாலைக் காய்ச்சியதில் பால் திரிந்து விட்டது. வாங்கும் போதே தேதியைப் பார்த்து வாங்குவது நல்லது. இல்லாவிட்டால் கடையிலேயே ஓரிருநாள் வைத்திருந்தப் பாக்கெட்டுகளை நம்மிடம் தள்ளிவிடுவார்கள்.

5. வீட்டில் உள்ள குப்பைகளை மூடிய dustbin -ல் கவர் போட்டுத்தான் உபயோகிக்க வேண்டும். சிலர் வீட்டில் குப்பைத் தொட்டியைத் திறந்தேதான் வைத்திருப்பார்கள், என் அம்மா உள்பட. இது மிகவும் தவறு. அதிலிருந்துதான் கொசுக்கள் நிறைய வரும். dustbin -ல் கவர் போட்டு உபயோகிப்பதால் அதைக் கழுவுவதும் எளிது. எத்தனையோ தேவையில்லாத செலவுகளுக்கிடையில் இதற்காகவும் கொஞ்சம் செலவிடுவதில் தவறில்லை.

6. வெளியிடங்களில் கடைகளுக்கு செல்லும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை! 

Trial Room  இல்லாதக் கடைகள் இப்போது இல்லை. இதில் ஆளுயரக் கண்ணாடிகள் இருக்கும். சில இடங்களில் அதைத் தவறாக உபயோகிப்பவர்கள் இருக்கிறார்கள். அது டபுள் மிரராக இருக்கும். அதாவது, நம் உருவம் கண்ணாடியின் மறுபக்கத்திலும் தெரியக்கூடிய வகையில் இருக்கும்.

இதை எப்படிக் கண்டுபிடிப்பது?
கண்ணாடியில் நம் விரலைத் திருப்பி ஒட்டி வைத்துப் பார்த்தால் சாதாரணக் கண்ணாடியில் நம்முடைய நகம் தெளிவாகத் தெரியும். ஆனால் டபுள் மிரரில் நம் நகம் தெளிவாகத் தெரியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தக் கண்ணாடியில் பெண்கள் உடை மாற்றும் போது கவனமாக இருக்க வேண்டும். முடிந்த அளவு லைட்டை ஆஃப் செய்துவிட்டு மாற்றுவது நல்லது. இல்லையென்றால் நம் உருவம் மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு.   கடையில் மட்டுமல்ல, வீட்டிலும் கண்ணாடி ஜன்னல்கள் இருப்பதால் இரவில் உடை மாற்றும் போது லைட்டை ஆஃப் செய்து விட்டு மாற்றுவது நல்லது.

ஆபத்துக்கள் நிறைந்த உலகில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்!

10 comments:

raja said...

மிக உபயோகமுள்ள தகவல்கள் மிக்க நன்றி.. தொடர்ந்து எழுத எனது வாழ்த்துகள்...

Radhakrishnan said...

நல்ல நல்ல தகவல்கள். எச்சரிக்கையை மீறும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எல் கே said...

மிக முக்கிய அவசியமான தகவல்கள் நன்றி

ராஜவம்சம் said...

அவசியமானப்பதிவு வாழ்த்துக்கள் .

ஜெயந்த் கிருஷ்ணா said...

தற்போதைய காலகட்டத்திற்கு தேவையான விசயங்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..

Deepa said...

Super tips madam! Thank you.

Unknown said...

தற்போதைய காலகட்டத்திற்கு தேவையான விசயங்கள்... பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..

prabhadamu said...

மிக உபயோகமுள்ள தகவல்கள் மிக்க நன்றி.. வாழ்த்துகள்...

Ramnath said...

//
கண்ணாடியில் நம் விரலைத் திருப்பி ஒட்டி வைத்துப் பார்த்தால் சாதாரணக் கண்ணாடியில் நம்முடைய நகம் தெளிவாகத் தெரியும். ஆனால் டபுள் மிரரில் நம் நகம் தெளிவாகத் தெரியாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...
//

அப்படியல்ல. கண்ணடியில் விரல் வைத்தால் (அதாவது நகம்) நமது நகத்திற்கும் - கண்ணாடியில் தெரியும் பிம்பத்திற்க்கும் நடுவில் ஒரு கால் இன்ச் இடைவெளியை காணலாம். டபுள் சைடு கண்ணாடியில் விரலும் பிம்பமும் ஒட்டினார் போல் காணப்படும். உங்கள் வீட்டு கண்ணாடியை சோதித்துப் பார்க்கவும்.

பகிற்விர்க்கு நன்றி.

ராம்.

MANO நாஞ்சில் மனோ said...

அட அருமையான பதிவா இருக்கே...
வலைச்சரம் அறிமுகத்துலதான் உங்களை பார்க்க முடிஞ்சது...வாழ்த்துகள்....