சிறு பிள்ளைப் போல் துள்ளித் திரியக் கனவு கண்டேன்!
பெண் பிள்ளைப் போல் அடக்க, ஒடுக்கமாய் இரு.
ஆசைப்பட்டான் அண்ணன்.
மேலே படிக்க கனவு கண்டேன்!
படிப்பெதற்கு, சமையல் பழகு.
ஆசைப்பட்டார் அம்மா.
சாதனை செய்யக் கனவு கண்டேன்!
இந்த மாப்பிள்ளை உனக்கு ரொம்பப் பொருத்தம்.
ஆசைப்பட்டார் அப்பா.
அனைவரது ஆசைகளும் நிறைவேறியது.
தேங்கிப்போனது என் கனவுகள் மட்டுமே!
Monday 9 August, 2010
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
oru adakkapatta pennin vethanaigal
தனது ஆசைகளையும் கனவுகளையும் சொந்தங்களுக்காக தொலைத்த ஒரு பெண்ணின் வேதனை...
சிறு பிள்ளைப் போல் துள்ளித் திரியக் கனவு காண்பாள்!
ஆண் பிள்ளைப் போல் உற்சாகமாய் இருக்க...
ஆசைப்படு நண்பியாய்...
மேலே படிக்க கனவு காண்பாள்!
சமையலெதற்கு, பட்டம் வாங்கு...
ஆசைப்படு அன்னையாய்...
சாதனை செய்யக் கனவு காண்பாள்!
எந்த மாப்பிள்ளையும் இப்போது வேண்டாம்...
துணையாய் நில் தோழியாய்.
இருவரது ஆசைகளும் நிறைவேறும்.
எதிர்காலத்தில் உன் அன்பு மகளால்...
மிகவும் அருமை
மிகவும் அருமை
மிகவும் நன்றாய் சொல்லியிருகிறீர்கள். நிறைவேறத் ஆசைகள் வலிக்கும்.
உங்க மகள் மூலம் கண்டு விடுங்கள்.
NALLA IRUKKU.UNGA POST
அளவெடுத்தாற்போல் நறுக்கென்ற வரிகள். அருமை!
இது போல் நிறைய எழுதவும்.
அளவெடுத்தாற்போல் நறுக்கென்ற வரிகள். அருமை!
இது போல் நிறைய எழுதவும்.
கவிதை அருமை!
Post a Comment